புதுடெல்லி: இந்தியாவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக அதிபர் ராம்நாத் கோவிந்த் அதில் இடம் பெறுகிறார்.
டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து அந்தப் பணிகள் தொடங்கும். அதே நாளில் துணை அதிபர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களும் அதில் இடம்பெறும்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்குப் பல்வேறு மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் எதிர்ப்பும் ஆட்சேபமும் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.