மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த ரிக்‌ஷா ஓட்டுநரை சந்தித்த பிரதமர் மோடி

வாரணாசி: தனது மகள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த ரிக்‌ஷா ஓட்டுநரை நேரில் வரவழைத்து சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

மங்கள் கேவத் என்ற அவர், தூய்மை இந்தியா இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.

தனது கிராமத்தில் கங்கை ஆற்றங்கரையைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், தனது மகளின் திருமணத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரதமர் அலுவலகத்தில் திருமணப் பத்திரிகையை அளித்தார் மங்கள் கேவத். எனினும் பிரதமர் மோடி திருமணத்துக்கு வரவில்லை. மாறாக, வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

பிரதமரின் வாழ்த்துச் செய்தி தங்கள் குடும்பத்துக்கு பெரும் உற்சாகம் அளித்ததாகக் கூறுகிறார் மங்கள் கேவத்.

இந்நிலையில் ஒருநாள் பயணமாக வாரணாசி சென்ற பிரதமர் மோடி, அங்கு மங்கள் கேவத்தை சந்தித்து நலம் விசாரித்தார்.

தூய்மை இந்தியா இயக்கத்துக்கான அவரது பங்களிப்பைப் பாராட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!