கவிதைகள் எழுதி கின்னசில் இடம்பிடித்த தமிழக இளைஞர்

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2020 நிமிடங்களில் 2020 கவிதைகள் எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜடைகிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல்.

இவருக்கு சிறுவயதில் இருந்தே கவிதை, கதை புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் இருந்து வந்தது.

பள்ளி நாட்களில் இருந்தே கவிதை புத்தகங்களை படித்து வந்த கதிர்வேல், எந்த தலைப்பை சொன்னாலும் உடனடியாக கவிதை எழுதும் திறன் கொண்டவர். பலரும் இவரது கவிதை தொகுப்பை வெகுவாக பாராட்டினார்கள்.

இதையடுத்து, தமிழில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு அதிகரித்தது.

அதனை நடைமுறைப்படுத்தும் விதத்தில் 2020 நிமிடங்களில் 2020 கவிதைகளை எழுதி அசத்தியுள்ளார் கதிர்வேல். அவருடைய படைப்பை ஏற்ற கின்னஸ் அமைப்பு கதிர்வேலின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்த்து அவரது திறமையை அங்கீகரித்துள்ளது.

கதிர்வேலுவுக்கு திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வேண்டும் என்ற விருப்பமும் உண்டு. அதற்கான வழிமுறைகளில் அவர் முயற்சி செய்து வருகிறார்.

#தமிழகம் #கவிதை #கின்னஸ் #திருப்பத்தூர் #கதிர்வேல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!