அமெரிக்கா-தலிபான் அமைதி உடன்பாடு: இந்தியா ஈடுபாடு

புதுடெல்லி: அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று அமைதி உடன்பாடு கையெழுத்தாகிறது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

அந்த வரலாற்று முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

தலிபான் பிரச்சினையில் ஆப்கானிஸ்தான் அரசு எடுக்கும் நிலைப்பாட்டை ஒட்டியே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதா வேண்டாமா என்ற முடிவை இந்தியா எடுக்கும் என்று முன்னதாக இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.

தலிபான்கள் தொடர்பான விவகாரத்தில் இந்தியா முதல் முறையாக நேரடி தொடர்பில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆப்கானிஸ் தான் அரசு சார்பில் ஆறு பேர் அடங்கிய குழுவினர் தோஹாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அங்கு நடத்தப்படும் பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தான் சிறைகளில் உள்ள சுமார் 5,000 தலிபான்களை விடுவிக்கும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா பேச்சு நடத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!