அடம்பிடித்து மருத்துவரை மணந்த ஐஏஎஸ் அதிகாரி; வரதட்சணை என்ன தெரியுமா?

நெல்லை மாவட்ட பயிற்சி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தனது திருமணத்திற்கு கேட்ட வரதட்சணையைக் கண்டு பல பெண்கள் ஓட்டம் பிடித்த வேளையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணபாரதி அதற்கு சம்மதித்து மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.

அப்படி என்னதான் கேட்டார் திரு சிவகுரு பிரபாகரன்?

பேராவூரணிக்கு அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல சிரமங்களுக்கிடையே ஐஏஎஸ் அதிகாரியான அவர், “ஒரு மருத்துவரைத்தான் திருமணம் செய்வேன்,” என்று உறுதியாக இருந்தார்.

இதை மனதில் கொண்டு அவருடைய பெற்றோர்கள் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்த நிலையில், மருத்துவம் படித்த பல பெண்கள் இவருடைய நிபந்தனைகளை கேட்டு ஓட்டம் பிடித்தனர்.

கடைசியாக சென்னை நந்தனம் கல்லூரியில் கணித பேராசிரியரின் மகளும், மருத்துவருமான கிருஷ்ணபாரதி, திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

கடந்த 26ஆம் தேதியன்று இருவரின் திருமணம் நடைபெற்றது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் மருத்துவர் வாரத்தில் 2 நாட்கள், தனது சொந்த கிராமமான ஒட்டங்காடு மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே ஆட்சியரின் நிபந்தனை.

இதுதான் அவர் வரதட்சணை.

திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவை சீரோடும் சிறப்போடும் நடத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் திரு சிவகுரு பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

#ஐஏஎஸ் #திருமணாம் #மருத்துவர் #வரதட்சிணை #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!