நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்குத் தண்டனை

நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்குத் தண்டனை

1 mins read
2d581f81-e575-411a-a57d-df4d51066027
நிர்பயா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்‌ஷய் குமார் சிங் ஆகிய நால்வரும் வரும் 20ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நேற்று நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. படம்: ஊடகம் -

புதுடெல்லி: நிர்பயா என்ற மருத்துவப் படிப்பு மாணவி, கடந்த 2012ஆம் ஆண்டு நண்பருடன் பேருந்தில் சென்றபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டார்.

இதன் தொடர்பில் முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நால்வரும் 20ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என்று நேற்று நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.