கப்பல்களில் தவிக்கும் 16 ஆயிரம் பேர்

கப்பல்களில் தவிக்கும் 16 ஆயிரம் பேர்

1 mins read

புதுடெல்லி: சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 452 கப்பல்களில் இந்திய துறைமுகங்களை வந்தடைந்தவர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த கப்பல்களை குறிப்பிட்ட இடங்களில் நங்கூரமிட்டு நிறுத்திவைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. மொத்தம் 16,076 போ் இந்தியத் துறைமுகங்களில் இறங்க முடியாமல் அந்தக் கப்பல்களிலேயே தங்கியுள்ளனர்.