இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 57 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர்.
கேரளாவில் 17 பேர், மஹாராஷ்டிராவில் 11 பேர், உ.பி.யில் 10 பேர், டில்லியில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா வெளிநாட்டினருக்கான விசாவை ஏப்ரல் 15ம் தேதி வரை ரத்து செய்து, வெளிநாட்டினர் வருகையை கட்டுப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்