கொரோனா கிருமி பயம்: கோழிகளை இலவசமாக வாங்க மறுத்த மக்கள்

2 mins read
e3f78ce8-2cf9-4981-8b50-f905ea44f433
கொரோனா மற்­றும் பறவை காய்ச்­சல் எதி­ரொ­லி­யாக 3 கிலோ பிராய்­லர் கோழி ரூ.100-க்கு கூவி, கூவி விற்­பனை செய்­யப்­ப­டு­கிறது. இருந்­தா­லும் கோழிக்­க­றியை வாங்க பெரு­பா­லான மக்­கள் முன்வர­வில்லை. கோப்புப்படம் -

நகரி: கோழிக்­கறி சாப்­பிட்­டால் கொரோனா கிருமி தாக்­கும் என்­னும் வதந்­தி­கள் கார­ண­மாக ஆந்­தி­ரா­வில் கோழிக்­கறி விலை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை வீழ்ச்சி அடைந்­து­விட்­டது.

அதற்­கும் வாங்க ஆளில்­லாத நிலை­யில் கோழிப்­பண்ணை உரி­மை­யா­ளர்­கள் மற்­றும் வியா­பா­ரி­கள் கடு­மை­யான நஷ்­டத்தை சந்­தித்து வரு­கி­றார்­கள்.

இந்­த­ நி­லை­யில் கிருஷ்ணா மாவட்­டம் மைல­வ­ரம் மண்­ட­லம் கூலு­கூரி வாரி கூடெம் என்­னும் கிரா­மத்­தில் கோழிப்­பண்ணை அதி­பர் குவ்­வ­ல­கு­மார் ரெட்டி சுமார் 2000 கோழி­களை அரு­கில் உள்ள கிரா­மத்­தி­ற்கு இல­வ­ச­மாக வழங்க கொண்டு சென்­றார்.

இல­வ­ச­மாக கொடுத்­தா­லும் பெரும்­பா­லா­ன­வர்­கள் கோழியை வாங்க மறுப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். விலை வீழ்ச்சி மட்­டு­மின்றி விற்­பனை குறைந்து விட்­ட­தால் கோழி­க­ளுக்கு போடும் தீனிக்கு கூட கட்­டுப்­ப­டி­யா­கா­த­தால் இந்த முடி­வுக்கு வந்­த­தாக கூறி­னார். இத­னால் தனக்கு ஒரே வாரத்­தில் ரூ.10 லட்­சம் நஷ்­டம் ஏற்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

கேர­ளா­வில் கொரோனா வைரஸ் பாதித்­துள்ள நிலை­யில் தற்­போது பறவை காய்ச்­ச­லும் பரவி பெரும் பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கோழிக்­கோட்­டில் 2 கிரா­மங்­களில் உள்ள பண்­ணை­களில் பறவை காய்ச்­சல் தென்­பட்­டது.

இத­னை­ய­டுத்து 30 ஆயி­ரம் கறிக்­கோ­ழி­கள் தீ வைத்து எரிக்­கப்­பட்­டன. இத­னால் கறிக்­கோழி விலை கடும்­வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

கேர­ளா­வில் 10 நாட்­க­ளுக்கு முன்பு கோழிக்­கறி கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்­ப­னை­யா­னது. கொரோனா மற்­றும் பறவை காய்ச்­சல் எதி­ரொ­லி­யாக 3 கிலோ பிராய்­லர் கோழி ரூ.100-க்கு கூவி, கூவி விற்­பனை செய்­யப்­ப­டு­கிறது.

இருந்­தா­லும் கோழிக்­க­றியை வாங்க பெரு­பா­லான மக்­கள் முன் வர­வில்லை. இத­னால் கோழி இறைச்சி கடை வெறிச்­சோடி காணப்­ப­டு­கிறது. கோழி கழி­வு­களை தின்­னும் நாய்­கள் ஆங்­காங்கே சோர்­வாக படுத்­து­கி­டக்­கின்­றன. நாய்­க­ளுக்கு உட­லில் புண் ஏற்­பட்டு அவ­திப்­ப­டு­கின்­றன.

இது தவிர கோழி கழி­வு­கள் மீன் பண்­ணை­க­ளுக்கு விநியோகம் செய்­யப்­ப­டு­கின்­றன. கோழிக் கழி­வு­கள் கொட்­டப்­படும் மீன் பண்­ணை­களில் மீன்­கள் செத்து மிதக்­கின்­றன.

கடந்த வாரம் ரூ.5க்கு விற்ப னையான முட்டை நேற்று ரூ.3க்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கிறது. அதனை வாங்­க­கூட பொது­மக்­கள் முன்­வ­ர­வில்லை. பெரும்­பா­லான கடை­களில் கோழி பிரி­யாணி ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.