புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட 2வது நபர் உயிரிழந்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 69 வயது பெண்ணுக்கு சளிக்காய்ச்சலும் இருமலும் இருந்ததால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரி ழந்தார். அவர் கொரோனா கிருமிக்குப் பலியானதை டெல்லி அரசும் மத்திய சுகாதார அமைச்சும் உறுதி செய்துள்ளன.
கடந்த மாதம் அந்தப் பெண்ணின் மகன் இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு டெல்லி திரும்பியிருந்தார்.
அதன் பிறகுதான் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரது தாயாரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து இருவரும் கடந்த 7ஆம் தேதி டெல்லி ராம் மனோகர் லோதியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்். இரண்டு நாட்களில் அப்பெண்ணின் உடல்நிலை மட்டும் மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
அந்தப் பெண் ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது.
இதற்கு முன்பு கர்நாடக மாநிலம் கலப்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் கடந்த 11ஆம் தேதி கிருமித் தொற்றுக்கு பலியானார்.
இவர், சமீபத்தில் சவுதி அரேபியாவிலிருந்து திரும்பியவர். இது, இந்தியாவில் கிருமியால் ஏற்பட்ட முதல் பலியாகும்.
இதற்கிடையே வெள்ளிக் கிழமை அன்று கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் கொரோனா கிருமி அச்சம் காரணமாக இன்ஃபோசிஸ் அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒருவருடன் இன்ஃபோசிஸ் அலுவலக ஊழியருக்கு ேநரடி தொடர்பு இருந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து இன்ஃபோசிஸ் அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
"முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக ஐஐபிஎம் கட்டடத்திலிருந்து நாங்கள் வெளியேறினோம்," என்று இன்ஃபோசிஸ் அறிக்கை குறிப்பிட்டது. இந்தியாவில் இதுவரை 83 பேர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசுகள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் 91 பேர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

