பெரும்பான்மையை நிரூபிக்க கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தரவு

2 mins read
84861d38-fc51-47f0-a988-da6ea8db3ddf
மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் இன்று அம்மாநில சட்டப்பேரவையில் தமது அரசுக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். படம்: ஊடகம் -

போபால்: மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் இன்று அம்மாநில சட்டப்பேரவையில் தமது அரசுக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முதல்வருமான கமல்நாத் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களக அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் மறைமுக மோதல் நிலவி வந்தது. குறிப்பாக ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் ஜோதிராதித்யா சிந்தியா தம்மை மாநில காங்கிரஸ் தலைமை புறக்கணிப்பதாக புகார் எழுப்பி வந்தார்.

முதல்வர் பதவியில் இருந்து கமல்நாத்தை நீக்கவேண்டும் என ஒருதரப்பு வலியுறுத்தியது. ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைமை இதற்கு செவிசாய்க்கவில்லை.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஜோதிராதித்யா சிந்தியா திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் பதவி விலகுவதாக அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் கடிதம் அளித்தனர்.

இதனால் முதல்வர் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதுபற்றி ஆளுநர் கவனத்துக்கு கொண்டு சென்ற பாஜக நிர்வாகிகள், முதல்வர் கமல்நாத் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக சுட்டிக் காட்டினர்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என ஆளுநரை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளார் முதல்வர் கமல்நாத். இதையடுத்து திங்கட்கிழமையன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்­கான அறி­விப்பு சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு வெளி­யா­னது.

உத்­த­ர­ப் பி­ர­தசே சட்­டப்­பே­ர­வை­யில் மொத்­தம் 230 இடங்­கள் உள்­ளன.

இவற்­றுள் 2 இடங்­கள் காலி­யாக உள்­ளன. இந்­நி­லை­யில் இன்று ஆளு­நர் உரை­யு­டன் சட்­டப்­பே­ர­வைக் கூட்­டம் துவங்­கும் என்­றும் அதை­ய­டுத்து அரசு மீதான நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடை­பெ­றும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காங்­கி­ரஸ் எம்­எல்­ஏக்­களை பாஜ­க­வி­னர் பெங்­க­ளு­ரு­வில் தங்­கள் கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருப்­ப­தாக காங்­கி­ரஸ் தரப்பு புகார் கூறு­கிறது. ஆனால் பாஜ­க­வி­னர் இதை மறுத்­துள்­ள­னர்.

22 அதிருப்தி எம்எல்ஏக்களும் தனிப்பட்ட முறையில் தமக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆளுநர் லால்ஜி டாண்டன் தெரிவித்துள்ளார்.