புதுடெல்லி: கைபேசிகளுக்கான வரியை உயர்த்துவது என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இனி கைபேசிக்கான சரக்கு மற்றும் சேவை வரி 18 விழுக்காடாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக கைபேசி கருவிகள் மற்றும் குறிப்பிட்ட உதிரி பாகங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 12 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த வரி உயர்வு எதிர்வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப சில முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் முடிவால் கைபேசி கருவிகளின் விலை அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் தெரி வித்துள்ளனர்.

