மும்பை சிறைக் கைதிகளிடம் மாதந்தோறும் ரூ.6 கோடி லஞ்சம் பெறும் அதிகாரிகள்

1 mins read

மும்பை: சிறைக் கைதி­க­ளி­ட­மி­ருந்து மாதந்­தோ­றும் சுமார் 6 கோடி ரூபாய் வரை மும்பை ஆர்­தர் சாலை சிறை அதி­கா­ரி­கள் லஞ்­ச­மா­கப் பெறு­வ­தாக புகார் எழுந்­துள்­ளது.

இது தொடர்­பாக அச்­சி­றைச்­சா­லை­யில் உள்ள விசா­ர­ணைக் கைதி ஒரு­வர் மும்பை உயர்­ நீ­தி­மன்­றத்­துக்கு புகார்க் கடி­தம் அனுப்பி உள்­ளார்.

கடந்த ஜன­வரி மாதமே இப்­பு­கார் கடி­தத்­துக்கு விளக்­க­ம­ளிக்­கு­மாறு உயர்­ நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டும் மாநில அரசு இன்­னும் பதில் மனு தாக்­கல் செய்­ய­வில்லை. இந்­நி­லை­யில் புகார் கடி­தத்­தில் உள்ள விவ­ரங்­கள் வெளி­யாகி உள்­ளன.

"சிறை­யில் பல ஆண்­டு­க­ளாக அடைக்­கப்­பட்­டுள்ள பழைய தண்­ட­னைக் கைதி­கள் சிறை அதி­கா­ரி­க­ளின் வேலை­யாட்­க­ளா­கச் செயல்­ப­டு­கின்­ற­னர். புதிய கைதி­கள் மிரட்­டப்­ப­டு­கி­றார்­கள்.

"மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் செலவிட்டால் சிறையில் சகல வசதிகளுடன் இருக்கலாம் என புதிய கைதிகளிடம் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்கும் கைதிகள் மட்டும் விதிகளை மீறி செய்யப்பட்டுள்ள வசதிகள் நிறைந்த சிறைப் பகுதிக்கு அனுப்பப்படுவார்கள்," என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

ஆர்தர் சாலை சிறையில் 3800க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.