ஈரான், இத்தாலியில் தவித்த 452 பேர் தாயகம் திரும்பினர்

ஈரான், இத்தாலியில் தவித்த 452 பேர் தாயகம் திரும்பினர்

2 mins read
8179cfe8-b1e6-47bb-b7d6-dfdbd65bc94e
ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் இத்தாலியின் மிலான் நகரில் இருந்து 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் தாயகம் திரும்பினர். படம்: ஊடகம் -

புது­டெல்லி: உலக நாடு­களை அச்சு றுத்­த­லுக்கு ஆளாக்கி இருக்­கும் கொரோனா கிருமி பர­வல் அச்­சம் கார­ண­மாக ஈரான், இத்­தாலி ஆகிய நாடு­களில் இருந்து தாய கம் திரும்ப முடி­யா­மல் அவ­திப்­பட்டு வந்த மாண­வர்­கள், யாத்­ரீ­கர்­கள் உள்­ளிட்ட 452 பேர் பத்­தி­ர­மாகத் தாய­கம் திரும்­பி­னர்.

கொரோனா கிரு­மி­யால் பாதிக் கப்­பட்ட ஈரான் நாட்­டில் இருந்து இரு ஏர்-இந்­தியா விமா­னங்­களில் நேற்று காலை 234 பேர் தாய­கம் திரும்­பி­னர்.

இதே­போல் இத்­தா­லி­யில் இருந் தும் 218 பேர் இந்­தி­யா­வுக்கு பாது காப்­பாக அழைத்து வரப்­பட்­டுள்­ள­னர்.

"ஈரா­னில் சிக்­கித் தவித்த 131 மாண­வர்­கள் உள்­பட 234 பய­ணி­களும் பத்­தி­ர­மாக இந்­தியாவுக்கு அழைத்து வரப்­பட்­டுள்­ள­னர்.

"அவர்­கள் ஜெய்­சல்­மா­ரில் உள்ள இந்­திய ராணுவ மையத்­தில் 14 நாட்­கள் வரை தனி­மைப்­ப­டுத்­தப்­பட உள்­ள­னர்," என்று மத்­திய வெளி யுற­வுத் துறை அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் பதி­விட் டுள்ள ஜெய்­சங்­கர், "103 சுற்­று­லாப் பய­ணி­களும் 131 மாண­வர்­களும் பத்­தி­ர­மாக தாய­கம் திரும்­பி­யுள்­ள­னர்.

"இந்திய-ஈரான் நாட்டு தூது வர்களுக்கு நன்றியும் பாராட்டு களும்," என்று அவர் தெரிவித் துள்ளார்.

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்காக சிகிச்சை பெற்ற வர்களில் மேலும் 97 பேர் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து இந் நோய்க்கு பலியானவர்களின் எண் ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,729ஆக உயர்ந்து உள்ளதாகவும் ஈரான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரான் நாட்டில் உள்ள இஸ்லாமிய புனிதத் தலங்களைத் தரிசிக்கவும் அந்நாட்டில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் பயிலவும் சென்ற சுமார் 6,000 இந்தியர்கள் கொரோனா பீதியின் காரணமாக தாயகத்துக்கு திரும்ப விரும்பினர்.

அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக் கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

ஏற்கெனவே இந்தியா அனுப்பி வைத்த ராணுவ விமானம் மூலம் கொரோனா அச்சத்துடன் அங்கு தவித்த 58 யாத்ரீகர்கள் கடந்த செவ்வாயன்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த வெள்ளி அன்று 44 பேர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் அடுத்தகட்டமாக இப்போது 234 இந்தியர்கள் தனி விமானம் மூலம் நேற்று தாயகத் துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், இத்தாலியில் இருந்து 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் நாடு திரும்பி உள்ளனர்.

மத்திய அரசின் முயற்சியால் 'ஏர் இந்தியா' சிறப்பு விமானம் மூலம் இத்தாலி நாட்டின் மிலான் நகரில் இருந்த 211 இந்திய மாணவர்கள் உள்பட 218 பேர் நாடு திரும்பினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 55 மாணவர்களும் அடங்கு வர்.

நாடு திரும்பிய அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.