கொரோனா பாதிப்பு: மூவர் பலி, 147 பேர் பாதிப்பு

கொரோனா பாதிப்பு: மூவர் பலி, 147 பேர் பாதிப்பு

3 mins read
8de87e0a-fb3a-4365-bb3f-ecf642807999
குருத்வாராவுக்கு வரும் பக்தர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ். -

புது­டெல்லி: கொரோனா வைரஸ் தாக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்த மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரும் நிலை­யில், கோவிட்-19 நோயால் பலி­யா­னோ­ரின் எண்­ணிக்கை மூன்­றாக அதி­க­ரித்­துள்­ளது.

மேலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் ஒட்­டு­மொத்த எண்­ணிக்கை 147 என்­றும், இவர்­களில் 25 பேர் வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் தெரிய வந்­துள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் 41 பேர், கேர­ளா­வில் 27 பேர், டெல்லி 10, உத்­தர பிர­தே­சம் 16, அரி­யானா 14, கர்­நா­டகா 11, லடாக் 8, தெலுங்­கானா 5, ஆந்­திரா, ஒடிசா, உத்­த­ர­காண்ட், பஞ்­சாப் மாநி­லங்­களில் தலா ஒரு­வ­ருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

15 அம்ச கட்­டுப்­பாடு

இந்­நி­லை­யில் கொரோனா தாக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாக 15 அம்ச கட்­டுப்­பா­டு­களை மத்­திய அரசு விதித்­துள்­ளது.

அதன்­படி, நாடு முழு­வ­தும் கல்வி நிறு­வ­னங்­கள் மூடப்­ப­டு­கின்­றன. தனி­யார் நிறு­வன ஊழி­யர்­கள் வீடு­களில் இருந்து பணி­யாற்ற அறி­வு­றுத்­தப் பட்­டுள்­ளது. பொது­மக்­கள் அதி­கம் கூடும் இடங்­களில் ஆன்­மிக நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யக் கூடாது. மக்­கள் தேவை­யற்ற பய­ணங்­களை தவிர்க்க அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ராணுவ வீர­ருக்கு பாதிப்பு

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் முதல் முறை­யாக ராணுவ வீரர் ஒரு­வ­ருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

34 வய­தான அந்த வீரர் ஜம்மு காஷ்­மீ­ரின் லே பகு­தி­யில் உள்ள சுகாட் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர். இவ­ரது தந்­தைக்கு ஏற்­கெ­னவே கொரோனா பாதிப்பு உள்­ளது. மேலும் ராணுவ வீர­ரின் சகோ­தரி, மனைவி மற்­றும் 2 குழந்­தை­களும் தனி­மைப் படுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

உத்­தவ் தாக்­கரே எச்­ச­ரிக்கை

மக்­கள் அவ­சி­யம் இன்­றிப் பய­ணங்­கள் மேற்­கொண்­டால் மும்­பை­யில் மின்­சார ரயில், பேருந்­துப் போக்­கு­வ­ரத்து நிறுத்­தப்­படும் என மகா­ராஷ்­டிரா முதல்­வர் உத்­தவ் தாக்­கரே எச்­ச­ரித்­துள்­ளார்.

மாட்­டுச் சாணத்­துக்கு மவுசு

கொரோனா வைரஸ் தாக்­கத்­தால் மாட்­டுச்­சா­ணம், கோமி­யத்­திற்கு மவுசு ஏற்­பட்­டுள்­ளது. இவற்­றைப் பயன்­ப­டுத்­தி­னால் கொரோனா வைரஸ் தாக்­கு­த­லில் இருந்து தப்­பிக்­க­லாம் என்று கூறப்­ப­டு­வதை நம்பி, சிலர் ஒரு லிட்­டர் கோமி­யம், ஒரு கிலோ சாணத்தை ரூ.500க்கு வாங்­கு­கின்­ற­னர்.

பிர­த­மர் வேண்­டு­கோள்

பாஜ­க­வி­னர் அனைத்து அர­சி­யல் நிகழ்ச்­சி­க­ளை­யும் ரத்து செய்து, கொரோனா வைரஸ் தாக்­கு­தல் குறித்து மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று பிர­த­மர் மோடி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இந்த நேரத்­தில் எந்­த­வித கருத்து வேறு­பா­டு­க­ளை­யும் வெளிப்­ப­டுத்­தா­மல் அனை­வ­ரும் முழு ஒற்­று­மை­யு­டன் பணி­யாற்ற வேண்­டும் என்­றும் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

விமான நிலை­யங்­களில் உள்ள மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள், சுகா­தார ஊழி­யர்­கள், பாது­காப்­புப் படை­யி­னர் அனை­வ­ருக்­கும் பாராட்டு தெரி­வித்­துள்ள பிர­த­மர் மோடி, கொரோனா வைரஸ் தாக்­கு­தல் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­வ­ரும் ஊட­கங்­க­ளின் பங்­கும் பாராட்­டுக்­கு­ரி­யது எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

இரு விமான நிறு­வ­னங்­கள் நட­வ­டிக்கை

இதற்­கி­டையே, மலிவு விலை விமா­னச் சேவை வழங்­கும் 'கோ ஏர்' கோவிட்-19 நோய் தாக்­கத்­தால் பெரும் வரு­மான இழப்பை எதிர்­கொண்­டுள்­ளதை அடுத்து, ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லான ஊழி­யர்­களை அந்­நி­று­வ­னம் பணி­நீக்­கம் செய்து வரு­கிறது. 'ஜெட் ஸ்டார்' இதே போல் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

காணொ­ளித் திரு­ம­ணம்

சவுதி அரே­பி­யா­வில் பணி புரிந்­து­வ­ரும் தெலுங்­கா­னா­வைச் சேர்ந்த முகம்­மது அத்­னான் கான் என்­ப­வ­ருக்கு ஞாயிற்­றுக்­கி­ழமை திரு­ம­ணம் நடை­பெற இருந்­தது.

ஆனால் கொரோனா வைரஸ் பர­வல் எதி­ரொ­லி­யால் அவ­ரால் நாடு திரும்ப முடி­ய­வில்லை. இத­னால் காணொளி ஏற்­பாட்­டின் மூலம், திரு­ம­ணச் சடங்­கு­கள் முடிக்­கப்­பட்­டன.

ரிசர்வ் வங்கி ஒதுக்­கீடு

இதற்­கி­டையே கொரோ­னா­வால் ஏற்­பட்ட பாதிப்­பு­களை எதிர்­கொள்ள ரிசர்வ் வங்கி ஒரு லட்­சம் கோடி ரூபாய் ஒதுக்­கி­யுள்­ளது. இதன் மூலம் பணப்­பு­ழக்­கம் சீர­டை­யும் எனக் கரு­தப்­ப­டு­கிறது. நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­படும் விளை­வு­களை சமா­ளிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளை­யும் அவ்­வங்கி மேற்­கொண்­டுள்­ளது.