மகாராஷ்டிராவில் 49 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

மகாராஷ்டிராவில் 49 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

2 mins read
dd32447a-4ccd-45c1-9d50-ec417072ca07
உச்ச நீதிமன்றத்துக்கு வருவோரின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது. படம்: ஊடகம் -

மும்பை: இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால் நான்காவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மகா­ராஷ்­டி­ரா­வில் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 49ஆக அதி­க­ரித்­துள்­ளது.

அண்­மை­யில் இங்­கி­லாந்து சென்று வந்த 22 வயது இளம் பெண்­ணுக்­கும், துபா­யில் இருந்து திரும்­பிய 49 வயது பெண்­ம­ணிக்­கும் கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

நாடு­ மு­ழு­வ­தும் 173 பேர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த 70 வயதான ஷகீத் பகத் சிங் என்பவர் நேற்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்­திய மாநி­லங்­களில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது மகா­ராஷ்­டி­ரா­வில் தான். அங்கு 3 வெளி­நாட்­ட­வர்­களும் கொவிட்-19 நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த மாநில அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது. அதன்­படி, பொது இடங்­களை அசுத்­தம் செய்­வோ­ருக்கு ஆயி­ரம் ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொது மக்­கள் தேவை­யின்றி பேருந்து, ரயில் பய­ணங்­களை மேற்­கொள்ள வேண்­டாம் என அரசு கேட்­டுக் கொண்­டுள்­ளது. இந்­நி­லை­யில் பொது மக்­கள் வீட்டை விட்டு வெளி­யேற வேண்­டாம் என மகாராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­கரே வலி­யு­றுத்தி உள்­ளார்.

கொரோனா கிருமி பாதிப்பு குறித்து பிர­த­மர் மோடி­யி­டம் தொலை­பேசி வழி ஆலோ­சனை மேற்­கொண்­ட­தா­க­வும், இந்த விவ­கா­ரத்­தில் மத்­திய அரசு முழு ஒத்­து­ழைப்பு அளிக்­கும் என பிர­த­மர் தன்­னி­டம் உறு­தி­ய­ளித்­த­தாகவும் உத்­தவ் தெரி­வித்­துள்­ளார்.

"நாம் கொரோனா கிரு­மித் தொற்­றுக்கு எதி­ரான போரில் ஈடு­பட்­டுள்­ளோம். அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. நிலைமை மிக மோச­மாக இல்லை என்­றா­லும் கவ­லைப்­படும் வகை­யில் உள்­ளது.

"மின்­சார ரயில்­கள், பேருந்­து­களை 50 விழுக்­காடு இருக்­கை­க­ளு­டன் இயக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பய­ணி­கள் இடை­வெளி விட்டு இருக்­கை­யில் அமர்ந்து பய­ணிப்­ப­தன் மூலம் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க முடி­யும் என நம்­பு­கி­றோம்," என்­றார் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே.

பேருந்­து­களில் எத்­தனை இருக்­கை­கள் உள்­ள­னவோ அதற்­கேற்­பவே பய­ணி­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்­றும், நின்­ற­படி பய­ணம் செய்ய அனு­மதி கிடை­யாது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

மற்­றொரு நட­வ­டிக்­கை­யாக கடை­கள் திறந்து இருக்­கும் நேரம் பற்றி விரை­வில் முடிவு செய்­யப்­படும் என்­றார் அவர்.

"50 விழுக்­காடு ஊழி­யர்­க­ளு­டன் அரசு அலு­வ­ல­கங்­கள் இயங்­கும். முதல்­நாள் பணிக்கு வரும் அரசு ஊழி­யர்­கள் மறு­நாள் பணிக்கு வர­மாட்­டார்­கள். சுழற்சி அடிப்­ப­டை­யில் பணி­யாற்­று­வர்," என்­றார் முதல்­வர் உத்­தவ்.