மலேசியா விமான நிலையத்தில் தவித்த 200 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்

மலேசியா விமான நிலையத்தில் தவித்த 200 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்

1 mins read
57dfb2aa-7c51-439c-9b5e-da6c83854c8b
கோலாலம்பூர் விமான நிலையத்தில் மாணவர்கள். படம்: ஊடகம் -

விசாகப்பட்டினம்: இந்தியா திரும்ப முடியாமல் மலேசிய விமான நிலையத்தில் முடங்கிய இந்திய மாணவர்கள் 200 பேர் நேற்று முன்தினம் பத்திரமாக தாயகம் திரும்பினர்.

இம்மாணவர்கள் பிலிப்பீன்சில் படித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா கிருமி அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் நாடு திரும்ப முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அவர்களை பிலிப்பீன்சுக்கு அனுப்பி வைத்த கல்விச் சேவை நிறுவனம் செய்தது.

அதன்படி, பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து கோலாலம்பூர் சென்று, பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானத்தில் இந்தியா செல்வது என முடிவானது.

மார்ச் 17ஆம் தேதி காலை இரு குழுக்களாக மாணவர்கள் கோலாலம்பூர் சென்றடைந்தனர். ஆனால் அங்கிருந்து இந்தியா செல்வதற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட தகவலறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை­ய­டுத்து தங்­களை அழைத்­துச் செல்ல இந்­திய அரசு சிறப்பு விமா­னத்தை அனுப்ப வேண்­டும் என மாண­வர்­கள் சமூக வலைத் ­த­ளங்­கள் வழி வேண்­டு­கோள் விடுத்­த­னர்.

இந்­நி­லை­யில் 18ஆம் தேதி மாலை இரு விமா­னங்­களில் மாண­வர்­கள் விசா­கப்­பட்­டி­னத்­துக்­கும், டெல்­லிக்­கும் அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். அதற்­கான ஏற்­பா­டு­களை இந்­திய அரசு செய்­தி­ருந்­தது.

தாய­கம் திரும்­பிய மாண­வர்­கள் அனை­வ­ரும் தனி­மைப்படுத்­தப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளது.

கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இல்லை என உறு­தி­யான பிறகே அவர்­கள் வீடு திரும்ப அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.