நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேறியது

டெல்லியில் நிர்பயா குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (வயது 25), வினய் குமார் சர்மா (வயது 26), அக்‌ஷய் குமார் தாக்கூர் (வயது 31) ஆகிய 4 பேருக்கும் இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் இந்த நால்வரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை டெல்லி நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பின்னர் உறுதி செய்தன.

மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்த வண்ணம் இருந்ததால் அவர்களை தூக்கிலிடும் ந்அடைமுறை 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.

குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் அதிபரால் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இதைத்தொடர்ந்து, டெல்லி சிறைத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா, குற்றவாளிகள் 4 பேரையும் 20ஆம் தேதி (இன்று) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு கடந்த 5ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தார்.

அதற்குப் பிறகும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, குற்றவாளிகள் நால்வர் தரப்பிலும் வழக்கறிஞர் ஏ.பி.சிங் டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி தர்மேந்தர் ராணா நேற்று தள்ளுபடி செய்தார்.

அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா தேவி நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அவர், தனது கணவர் அப்பாவி என்றும், தனக்கு நீதி வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், கணவருடன் தன்னையும், தனது மகனையும் சேர்த்து தூக்கில் போட வேண்டும் என்று கோரி கதறி அழுததால் மயங்கி விழுந்தார்.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகிய 6 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதேபோல் இந்த வழக்கில் சாட்சிகளை மீண்டும் வரவழைத்து மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று கோரி முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவையும், தன்னுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

கற்பழிப்பு சம்பவம் நடந்த நாளில் தான் டெல்லியில் இல்லை என்று கூறி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து முகேஷ் குமார் சிங் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீடு செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி ஆனது.

குற்றவாளிகளின் தரப்பில் அனைத்துலக நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.

அவரது மனைவி புனிதா தேவி, தனது கணவர் இறந்து அதன் காரணமாக தான் விதவையாக வாழ விரும்பவில்லை என்றும், எனவே அவரை தூக்கில் போடுவதற்கு முன்பு தனக்கு விவாகரத்து வாங்கி கொடுக்குமாறும் கோரி அவுரங்காபாத் குடும்ப நல கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது புனிதா தேவியின் வழக்கறிஞர், அக்‌ஷய் குமார் சிங்கை சந்திப்பதற்காக புனிதா தேவி டெல்லி சென்று இருப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இறுதி வாய்ப்பாக முறையீடு செய்தார்கள்.

குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங், வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த 2வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. தூக்கு தண்டனயை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தர்மேந்திர ராணா தள்ளுபடி செய்தார்.

இந்த சூழலில் மீண்டும் கடைசி வாய்ப்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை குற்றவாளிகள் 4 பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலையிலான அமர்வு முன் நேற்று இரவு 10 மணிக்கு விசாரிக்கப்பட்ட அந்த மனுக்கள் மீண்டும் நிராகரிக்கப்பட்டன.

இதற்கிடையே நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன் என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நிருபர்களிடம் தெரிவித்துச் சென்றார்.

இதனிடையே பவன் குப்தா நள்ளிரவு குற்றவாளிகள் தண்டனை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்தார்.

மேற்படி மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் முடிவில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதன் மூலம் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் தனித்தனியே அவர்களுக்கான தூக்கு மேடையில் இன்று காலை 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

7 ஆண்டுகளுக்கு பிறகாவது குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவதால் தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று நிர்பயாவின் தாயார் கூறி உள்ளார்.

ஒட்டு மொத்த தேசத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனது மகளுக்கு நீதி கிடைக்க உதவிய அனைத்தும் நாட்டு மக்களுக்கும், தலைமை நீதிபதிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கிடைத்தவுடன் சிறைக்கு வெளியே காத்திருந்த ஏராளமான மக்கள் மகிழ்ச்சியுடன் கோஷமிட்டு,இனிப்புகளை வழங்கினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!