யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்­பில் அம்பானியிடம் விசாரணை

யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்­பில் அம்பானியிடம் விசாரணை

1 mins read
4b344464-05f5-40f6-a3d8-ef7ef206d397
யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்­பில், ரிலை­யன்ஸ் குழு­மத்­தின் தலை­வர் அனில் அம்­பா­னியை அம­லாக்­கத் துறை 9 மணி நேரம் விசா­ரித்­தது. படம்: ஊடகம் -

மும்பை: யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்­பில், ரிலை­யன்ஸ் குழு­மத்­தின் தலை­வர் அனில் அம்­பா­னியை அம­லாக்­கத் துறை 9 மணி நேரம் விசா­ரித்­தது.

யெஸ் வங்­கி­யின் வராக்­க­டன் அதி­க­ரித்­த­தால் அது நொடித்­துப் போகும் நிலைக்­குச் சென்­றது. அது இப்­போது ரிசர்வ் வங்­கி­யின் கட்­டுப்­பாட்­டில் உள்­ளது.

அந்த வங்­கி­யில் பிர­பல தொழி­லதி­ப­ரான ரிலை­யன்ஸ் குழு­மத்­தின் தலை­வர் அனில் அம்­பா­னி­யின் 9 நிறு­வ­னங்­கள் ரூ.12,800 கோடி கடன் வாங்­கி­யுள்­ளன. அவை திருப்­பிச் செலுத்­தப்­ப­ட­வில்லை.

இந்நிலையில், அனில் அம்­பா­னியை நேரே வர­வ­ழைத்து அம­லாக்­கத்­துறை விசா­ரித்­தது.

இதே­போல், எஸ்­செல் குழு­மத் தலை­வர் சுபாஷ் சந்­திரா, ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னர் நரேஷ் கோயல் உட்­பட பல­ருக்கு அம­லாக்­கத் துறை அழைப்­பாணை அனுப்பி இருந்­தது. ஆனால், அவர்­கள் பல கார­ணங்­களைக் கூறி விசார ணைக்கு வர­வில்லை.