ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யில் நின்ற ரயில் பய­ணி­கள்

ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யில் நின்ற ரயில் பய­ணி­கள்

1 mins read
583fd21f-92ea-4e95-83cd-a5e697f3e45e
தாதர் ரயில் நிலை­யத்தில் தள்ளித் தள்ளி நின்ற பய­ணி­கள். படம்: இந்­திய ஊட­கம் -

மும்பை: மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் ரயில் நிலை­யங்­கள், பேருந்து நிலை­யங்­கள், விமான நிலை­யங்­களில் பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. வெளி­யூர் மற்­றும் மின்­சார ரயில்­களில் செல்­லும் பய­ணி­கள் ரயில் நிலைய டிக்­கெட் கவுண்ட்­டர்­களில் ஒரு­வ­ருக்கு பின் ஒரு­வர் இடித்­துக்­கொண்­டும், முந்­திக்­கொண்­டும் டிக்­கெட்­டு­களை எடுத்து வந்­த­னர்.

இந்த நிலை­யில் பய­ணி­கள் நெரி­ச­லில் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தொடு­வ­தன் மூலம் கொரோனா கிருமி பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக ரயில்வே நிர்­வா­கம் சிறப்பு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதன்­படி வெள்­ளிக்­கி­ழமை முதல் எல்லா ரயில் நிலை­யங்­க­ளின் டிக்­கெட் கவுண்ட்­டர்­க­ளி­லும் பய­ணி­கள் ஒரு மீட்­டர் அல்­லது மூன்­றடி இடை­வெ­ளி­யில் ஒரு­வ­ருக்­குப் பின் ஒரு­வர் நிற்க வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­ட­னர்.

மேலும் அவர்­கள் சரி­யான இடை­வெ­ளி­யில் நிற்­ப­தற்கு வச­தி­யாக ரயில்வே பாது­காப்­புப்­படை போலி­சார் மூன்­றடி இடை­வெ­ளி­யில் கோடு போட்டு அடை­யா­ளப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். அந்­தக் கோட்­டில்­தான் பய­ணி­கள் நிற்­க­வேண்­டும் என­வும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தொடும் தூரத்­தில் நிற்­கக்­கூ­டாது என­வும் ரயில்வே பாது­காப்­புப் படை போலி­சார் அறி­வு­றுத்தி வரு­கின்­ற­னர்.

இதைத்­தொ­டர்ந்து வெள்­ளிக்­கி­ழமை மும்பை தாதர், சிஎஸ்­எம்டி உள்­ளிட்ட ரயில் நிலை­யங்­க­ளின் டிக்­கெட் கவுண்ட்­டர்­களில் பய­ணி­கள் ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யில் நிறுத்­தப்­பட்­ட­னர்.