இத்தாலியில் தவித்த இந்திய மாணவர்கள் 263 பேர் மீட்பு

இத்தாலியில் தவித்த இந்திய மாணவர்கள் 263 பேர் மீட்பு

2 mins read
38d9ef42-6c46-4beb-9d73-156c2304ce1d
இத்தாலியில் இருந்து சிறப்பு விமானத்தில் தாயகம் திரும்பிய மாணவர்கள். படம்: ஊடகம் -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்று உல­கெங்­கும் பர­வி­யுள்ள நிலை­யில் பல்­வேறு நாடு­களில் உள்ள இந்­தி­யர்­களை மீட்­கும் பணி­யில் வெளி­யு­றவு அமைச்சு தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் இத்­தா­லி­யில் சிக்­கித் தவித்த 263 இந்­திய மாண­வர்­கள் சிறப்பு விமா­னம் மூலம் நேற்று புது­டெல்லி வந்­த­டைந்­த­னர். தங்­க­ளைப் பத்­தி­ர­மாக மீட்ட மத்­திய அர­சுக்கு அவர்­கள் நன்றி தெரி­வித்­த­னர்.

கொரோனா கிரு­மித் தொற்று கார­ண­மாக உல­கெங்­கி­லும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பலி­யாகி உள்­ள­னர். இந்­தி­யா­வி­லும் கிரு­மித் தொற்று கார­ண­மாக சிலர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் பல்­வேறு நாடு­களில் உயர்­கல்வி பயின்று வரும் இந்­திய மாண­வர்­கள் நாடு திரும்ப முடி­யா­மல் ஆங்­காங்கே சிக்­கி­யுள்­ள­னர். தங்­களை உட­ன­டி­யாக சிறப்பு விமா­னம் மூலம் மீட்க வேண்­டும் எனப் பல்­வேறு நாடு­களில் உள்ள இந்­திய மாண­வர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு சுமார் 200 மாண­வர்­கள், பிலி­ப்­பீன்ஸ் தலை­ந­கர் மணி­லா­வில் இருந்து மலே­சியா வழி­யாக இந்­தியா செல்­வ­தற்கு முயன்­ற­னர். ஆனால் கோலா­லம்­பூர் வந்­த­டைந்­த­போது இந்­தி­யா­வுக்­கான விமா­னங்­கள் ரத்­தா­கி­ய­தாக அறி­விக்­கப்­பட்­ட­தால் அவர்­கள் செய்­வ­த­றி­யாது திகைத்­த­னர்.

இதுகுறித்து தகவலறிந்த இந்திய அரசு இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களை மீட்டது. இந்நிலையில் இத்தாலியில் தவித்து வந்த 263 இந்திய மாணவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன் பலனாக ரோம் நகருக்கு ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. அங்கிருந்த 263 இந்திய மாணவர்கள் நேற்று பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்.

நாடு திரும்பியுள்ள மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் டெல்லியில் உள்ள ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையே மலேசியாவில் கல்வி பயின்று வந்த சுமார் 200 இந்திய மாணவர்கள் தங்களையும் சிறப்பு விமானம் மூலம் மீட்க வேண்டும் என இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.