மார்ச் 31 வரை ரயில் சேவை முற்றிலும் ரத்து

மார்ச் 31 வரை ரயில் சேவை முற்றிலும் ரத்து

1 mins read
406c9b1e-7690-433e-972b-3e0b3e1027a2
கோப்புப்படம்: ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா தாக்கம் அதி­க­ரித்து வரும் நிலை­யில் எதிர்­வ­ரும் 31ஆம் தேதி வரை நாடு முழு­வ­தும் பய­ணி­கள் ரயில் சேவையை முழு­மை­யாக ரத்து செய்வ­தாக மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

நாடு முழுவதும் நேற்று அங்கு சுய ஊர­டங்கு உத்­த­ரவு கடை­ப் பி­டிக்­கப்­பட்­டது.

ஏற்­கெ­னவே அனைத்­து­லக விமா­னங்­கள் இந்­தி­யா­வில் மார்ச் 22 முதல் 29 வரை தரை­யி­றங்க அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் நாடு முழு­வ­தும் பல்­வேறு ரயில்­கள் போதிய பய­ணி­கள் இல்­லா­த­தால் ரத்­தாகி வந்­தன.

இந்நிலையில் ஒட்டுமொத்த ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.