மத்திய அரசு: தடையை மீறினால் 6 மாத சிறை

2 mins read
88727b86-4ef2-4d4a-8291-b08f8e6567da
-

புது­டெல்லி: பொது நட­மாட்ட கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அதை மீறு­ப­வர்­கள் மீது நட­வ­டிக்கை பாயும் என பெரும்­பா­லான மாநி­லங்­கள் அறி­வித்­துள்­ளன. அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு ஆறு மாதம் சிறைத் தண்­டனை விதிக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­யாக நாடு முழு­வ­தும் 23 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 80 மாவட்­டங்­களில் மார்ச் 31ஆம் தேதி வரை பொது நட­மாட்ட கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதை மீறி செயல்­ப­டு­வோர் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அனைத்து மாநில அர­சு­க­ளுக்­கும் மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது. இத்­த­கைய விதி­மீ­றல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு 200 ரூபாய் அப­ரா­தம், அல்­லது ஒரு மாதம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும். மேலும் இந்­திய குற்­ற­வி­யல் சட்­டப் பிரிவு 188ன் கீழ் ஆறு மாத சிறைத் தண்­ட­னைக்­கும் வாய்ப்­புண்டு. அல்­லது ஆயி­ரம் ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­படும். பல்­வேறு மாநி­லங்­களில் பெரும்­பான்­மை­யான பகு­தி­களில் 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­டைக் காலத்­தில் பொது இடங்­களில் நான்கு பேருக்கு மேல் கூடு­வது குற்­ற­மா­கக் கரு­தப்­படும். நேற்று முன்­தி­னம் சுய ஊர­டங்கு உத்­த­ரவை மீறிய பல­ரும் பல்­வேறு மாநி­லங்­களில் கைதாகி இருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. ராஜஸ்­தா­னில் கொரோனா கிரு­மித் தொற்று குறித்து சமூக வலைத்­த­ளங்­கள் மூலம் வதந்தி பரப்­பிய மற்­றும் பொது நட­மாட்ட கட்­டுப்­பாட்டை மீறிய 29 பேரை அம்­மா­நில அரசு கைது செய்­துள்­ளது. இதே­போல் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் 26 பேர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மத்­திய அர­சும் தீவி­ர­மாக அறி­வு­றுத்தி இருப்­ப­தை­ய­டுத்து,

இத்­த­கைய கைது நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதற்­கி­டையே, கொரோனா கிரு­மித் தொற்­றின் தீவி­ரத்தை நாட்டு மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் உணர வேண்­டும் என பிர­த­மர் மோடி வலி­யு­றுத்தி உள்­ளார். மேலும் வீடு­களில் இருந்­தால் மட்­டுமே குடும்­பத்­தா­ரைக் காப்­பாற்­ற­மு­டி­யும் என­வும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார். "கொரோனா கிரு­மித் தொற்­றின் ஆபத்தை பெரும்­பா­லான மக்­கள் இன்­ன­மும் உண­ரா­மல் இருக்­கி­றார்­கள். அது வருத்­தம் தரு­கிறது. மக்­கள் சுய ஊர­டங்கு உத்­த­ர­வைக் கூட பலர் தீவி­ர­மாக கடைப்­பி­டிக்­க­வில்லை.

"கொரோனா கிரு­மித் தொற்று மேலும் பர­வக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் மத்­திய அரசு மிக கடு­மை­யான விதி­மு­றை­களை அறி­வித்­துள்­ளது. ஆனால் பல­ரும் அந்த விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­கா­மல் உள்­ள­னர்," என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார். மக்­கள் மருத்­துவ விதி­மு­றை­க­ளைத் தீவி­ர­மாக கடைப்­பி­டிக்­கி­றார்­களா என்­பதை மாநில அரசு உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், வீடு­க­ளுக்­குள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­வர்­கள் தங்­க­ளது பொறுப்பை உணர்ந்து செயல்­பட வேண்­டும் எனக் கூறியுள்ளார்.