கைதட்டி நன்றி தெரிவித்த பொது மக்கள்

கைதட்டி நன்றி தெரிவித்த பொது மக்கள்

1 mins read
a5035f90-cc31-4bdd-9131-aae8808629fc
-

புது­டெல்லி: கொரோ­னா கிருமிக்கு எதி­ரா­கப் போரா­டும் பணி­யில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு ஒட்­டு­மொத்த இந்­திய மக்­களும் நேற்று முன்­தி­னம் நன்றி தெரி­வித்­த­னர். இதற்­காக அன்­றைய தினம் மாலை 5 மணிக்கு அனை­வ­ரும் தங்­கள் வீட்­டுக்கு வெளியே வந்து நின்று, சுமார் ஐந்து நிமி­டங்­கள் கைதட்­டி­யும் மணி­ய­டித்­தும் நன்றியை வெளிப்­ப­டுத்­தி­னர். மேலும் சிலர் தட்டு, கரண்­டி­க­ளைக் கொண்டு ஒலி­யெ­ழுப்­பி­னர். கொரா­னா­வுக்கு எதி­ரான போரில் மக்­க­ளைக் காக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்ள மருத்­து­வர்­கள், சுகா­தார ஊழி­யர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு நன்றி தெரி­விக்கவேண்­டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்­தி­ருந்­தார். இதை­யேற்று பல­ரும் தங்­கள் வீட்டு வாசல்­க­ளி­லும் பால்­க­னி­யி­லும் நின்று பலமாக கைதட்டி நன்றியைத் தெரி­வித்­த­னர்.