பிறந்த பெண் குழந்தையின் பெயர் 'கொரோனா'

பிறந்த பெண் குழந்தையின் பெயர் 'கொரோனா'

1 mins read
173767cb-671b-477b-a598-2a5d4f4c48f3
கொரோனா என பெய­ரி­டப்­பட்ட தக­வல் சமூக ஊட­கங்­களில் வேக­மா­கப் பரவி வரு­வ­தால் உத்­த­ரப் பிர­தே­சத்­தைக் கடந்து இந்­திய அள­வில் அந்­தப் பெண் குழந்தை பிர­ப­ல­ம­டைந்து வரு­கிறது. -

கோரக்­பூர்: உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் பிறந்த பெண் குழந்­தைக்கு கொரோனா என்று பெயர் சூட்­டப்­பட்டு உள்­ளது. இந்­தியா முழு­வ­தும் சுய ஊர­டங்­கில் முடங்­கிக் கிடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று இந்­தக் குழந்தை கோரக்­பூர் மாவட்­டம் சோக­வுரா என்­னும் கிரா­மத்­தில் பிறந்­தது.

உல­கம் முழு­வ­தும் ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­க­ளைக் கொன்­று­வ­ரும் கிரு­மி­யின் பெயரை அந்­தக் குழந்­தைக்­குச் சூட்­டி­ய­வர் அவ­ரது மாமா நிதேஷ் திரி­பாதி. குழந்­தையை ஈன்­றெ­டுத்த தாயான ராகினி திரி­பா­தி­யின் சம்­ம­தத்­தோடு கொரோனா பெயர் சூட்­டப்­பட்­ட­தாக அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். மேலும் அதற்­கான கார­ணத்­தை­யும் நிதேஷ் விளக்­கி­னார்.

"கொரோனா கிருமி ஆபத்­தா­னது என்­ப­தில் சந்­தே­கம் இல்லை. அது ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­க­ளைக் கொன்று வரு­கிறது. இருப்­பி­னும், மக்­க­ளி­டம் பல நல்ல பழக்­கங்­கள் ஏற்­ப­டு­வ­தற்கு இந்­தக் கிருமி கார­ண­மாக உள்­ளது. கொரோ­னா­வால் உலக மக்­கள் ஒற்­று­மை­யு­டன் இருக்­கின்­ற­னர். இந்­தக் குழந்தை மக்­கள் ஒற்­று­மை­யின் சின்­ன­மாக, தீமை­களை எதிர்த்­துப் போரா­டு­ப­வ­ளாக இருப்­பார்," என்­றார்.

கொரோனா என பெய­ரி­டப்­பட்ட தக­வல் சமூக ஊட­கங்­களில் வேக­மா­கப் பரவி வரு­வ­தால் உத்­த­ரப் பிர­தே­சத்­தைக் கடந்து இந்­திய அள­வில் அந்­தப் பெண் குழந்தை பிர­ப­ல­ம­டைந்து வரு­கிறது.