போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 22 எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் செய்ததால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில், முதல்வர் பதவியிலிருந்து கமல்நாத் விலகினார். இதனையடுத்து ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது.
பாஜகவின் சட்டமன்றக் குழு கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் நேற்று முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் 4வது முறையாக மத்திய பிரதேச முதல்வராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், மத்திய பிரதேச சட்டமன்றம் நேற்று கூடியது. இக்கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களும் சிவராஜ் சிங்கிற்கு ஆதரவளித்தனர். இதையடுத்து சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

