ஹைதராபாத்: கொரோனா குறித்த எந்தவித அச்சமும் இன்றி, ஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக நடந்துகொள்பவர் களைக் கண்டதும் சுட்டுத் தள்ளு வதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார். இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்கள் கொரோனா ஆபத்தை உணராமல் வெளியே திரிகிறார்கள். தொடர்ந்து இனியும் இதுபோல் வெளியே திரிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் ராணுவத்தை அழைத்துச் சுடவும் தயங்கமாட்டோம். அவரவரும் அவரவரது வீட்டிலேயே இருப்பதுதான் வீட்டிற்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது. “பல்வேறு பகுதிகளிலும் இந்த கிருமியின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஊரடங்கு உத்தரவு அர்த்தமற்றதாக மாறிவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. தேவையின்றி நடமாடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக் கும் நிலைமையை மக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது,” என்று ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘வெளியே வந்தால் சுட்டுத் தள்ளுேவாம்’
26 Mar 2020 09:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Mar 2020 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!