20 பேர் பலி, 760 பேர் உடலில் கிருமி; இதுவரையில் சமூகப் பரவல் இல்லை

20 பேர் பலி, 760 பேர் உடலில் கிருமி; இதுவரையில் சமூகப் பரவல் இல்லை

2 mins read
acda224f-a16d-4dc9-93b0-194724d3f172
இந்­தி­யா­வில் கொரோ­னா­கிருமி காரணமாக பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 760ஆக உயர்ந்­துள்­ள­து என்று மாநி­லங்­க­ளைச் சேர்ந்த தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. அவர்­களில் சுமார் 48 பேர் வெளி­நாட்­டி­னர். படம்: இபிஏ -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோ­னா­கிருமி காரணமாக பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 760ஆக உயர்ந்­துள்­ள­து என்று மாநி­லங்­க­ளைச் சேர்ந்த தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. அவர்­களில் சுமார் 48 பேர் வெளி­நாட்­டி­னர்.

அதே­வே­ளை­யில், கொரோ­னா கிருமி பாதிப்புக்கு 20 பேர் மாண்­டு­விட்­ட­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

வியா­ழக்­கி­ழமை மட்­டும் நாட்­டின் பல பகு­தி­களில் 7 பேர் மாண்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. கிருமி பாதிப்­பில் இருந்து மீண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 43லிருந்து 67ஆக உயர்ந்­துள்­ளது.

இந்­தி­யா­வில் கொவிட்-19 சுமார் 27 மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களில் ஏரா­ள­மான நோயா­ளி­களை உரு­வாக்கி வரு­கிறது என்­றா­லும் அது இன்­ன­மும் சமூ­கத் தொற்று நிலைக்கு வர­வில்லை என்று மத்­திய அரசு நேற்று உறு­தி­பட தெரி­வித்­தது.

அதி­க­பட்­ச­மாக கேர­ளா­வில் 137 பேரும் மகா­ராஷ்­டி­ரா­வில் 130 பேரும் கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். 17 மாநி­லங்­களில் கொரோ­னா­ கிருமி பாதிப்புக்குச் சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்­காகவே மருத்­து­வ­ம­னை­கள் கட்­டும் பணி தொடங்கி இருப்­ப­தாக சுகா­தா­ரத்­துறை இணைச் செய­லா­ளர் லாவ் அகர்­வால் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், கொரோனா ஏற்­ப­டுத்தி ­வ­ரும் மிரட்­ட­லை­யும் பாதிப்­பு­க­ளை­யும் அச்­சம் கலந்த சூழ்­நி­லை­யை­யும் சமா­ளிப்பதற்குரிய நிவா­ரண நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வும் ராணு­வத்­தைக் கள­மிறக்க மத்­திய அரசு தயா­ராகி வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இதன் தொடர்­பில் ராணுவ அமைச்­சர் ராஜ்­நாத்­ சிங் தலை­மை­யில் முப்­படை தள­ப­தி­க­ளின் ஆலோ­ச­னைக் கூட்­டம் புது­டெல்­லி­யில் வியா­ழக்­கி­ழமை நடந்­தது.

இத­ற்கி­டையே, கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக இந்­தி­­யா­வுக்­கு அன்­றா­டம் ரூ.35,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை இழப்பு ஏற்­படும் வாய்ப்பு இருப்­ப­தாக 'கேர் ரேட்­டிங்ஸ்' என்ற நிறு­வ­னம் கணக்­கிட்டு தெரி­வித்து உள்­ளது.

நாட்­டில் 21 நாள் முடக்­கத்­தின் கார­ண­மாக, 80% உற்­பத்தி இழப்பு ஏற்­படும் எனில், நாட்­டின் பொரு­ளி­ய­லில் ஏற்­படக்­கூ­டிய மொத்த இழப்பு 6.3 முதல் 7.2 லட்­சம் கோடி ரூபா­யாக இருக்­கும் என்று அந்த நிறு­வ­னம் தெரி­விக்­கிறது.

இந்த மதிப்­பீடு, நடப்பு நிதி­யாண்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்­பான 140 முதல் 150 லட்­சம் கோடி ரூபாய் என்­ற அடிப்­ப­டை­யில் செய்­யப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ள அந்த நிறு­வ­னம், முடக்­கம் 30 அல்­லது 60 நாட்­கள் வரை­கூட நீடிப்பதற்கு வாய்ப்­பி­ருப்­ப­தா­க­வும் தெரிவித்துள்­ளது. மிகப்பெரிய கவலை வேலை வாய்ப்பின்மைதான் என்றும் அது கூறியுள்ளது.