வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தோருக்கு கொரோனா கிருமித்தொர்று ஏற்பட்டுள்ள நிலையில், எந்த நாடுகளிலிருந்து வந்தோருக்கு கிருமித்தொற்று அதிகம் எனும் ஆய்வில் ஈடுபட்டார் உத்தர்ப் பிரதேசம் காசியாபாத்தில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வாளர்.
டாக்டர் அனுபம் சின்ஹா எனும் அவர், பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களின் பட்டியலையும் அவர்களில் கொரோனா கிருமித்தொற்று கண்டவர்களின் பட்டியலையும் சேகரித்து ஆய்வு செய்தார்.
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்தவர்களிடையே இங்கு கிருமித்தொற்று அதிகம் இருந்ததை அவர் கண்டுபிடித்தார். குறிப்பாக, துபாயிலிருந்து இந்தியாவுக்கு வந்த 720 பேரில் 98 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதையும் மற்ற நாடுகளிலிருந்து திருப்பியவர்களைவிட துபாயிலிருந்து திரும்பி, கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
இத்தாலியிலிருந்து திரும்பிய 32 பெருக்கும் அமெரிக்காவிலிருந்து திரும்பிய 12 பேருக்கும் சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய 22 பேருக்கும்கூட கிருமித்தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து நாடு திரும்பிய பின் கிருமித்தொற்று கண்ட சுமார் 300 பேரில் 142 பேர் துபாய், கத்தார், சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்திருந்ததும் தெரிய வந்தது.
துபாயில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் நோய் பாதிப்பு அதிகம் இருப்பதற்கான காரணம் குறித்த அவரது ஆய்வில் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் செல்வோர் துபாய் வழியாகவே செல்வது தெரியவந்தது.
இதுபோல இந்தியாவில் கொரோனா நோயால் இறந்தவர்களில் 65 சதவீதம் பேர் ஆண்களே என்றும் தெரியவந்துள்ளது. உலக அளவில் ஆண்கள் இறப்பு விகிதம் 60 சதவீதமாகவும், பெண்கள் இறப்பு விகிதம் 40 சதவீதமாகவும் உள்ளது.
இறப்பவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் உள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் இதே நிலையே காணப்படுகிறது. இது 6.25 சதவீதமாக உள்ளது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
#இந்தியா #துபாய் #கொரோனா