இந்தியாவில் 873 பேருக்கு கிருமி பாதிப்பு

இந்தியாவில் 873 பேருக்கு கிருமி பாதிப்பு

2 mins read
517ba070-26f1-426f-b2ed-5dbfadd8df6d
இந்­தி­யா­வில் வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 149 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருந்­தது தெரி­ய­வந்­தது. அவர்­க­ளை­யும் சேர்த்து நாட்­டில் மொத்­தம் 873 பேரை அந்­தக் கிருமி பாதித்து இருப்­ப­தாக மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்சு நேற்று தெரி­வித்­தது.  படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 149 பேருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருந்­தது தெரி­ய­வந்­தது. அவர்­க­ளை­யும் சேர்த்து நாட்­டில் மொத்­தம் 873 பேரை அந்­தக் கிருமி பாதித்து இருப்­ப­தாக மத்­திய சுகா­தா­ரத்­துறை அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இருந்­தா­லும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 78 பேர் குண­ம­டைந்­து­விட்­ட­தா­க­வும் ஒரு­வர் அவ­ரு­டைய நாட்­டுக்­குத் திரும்­பி­விட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் குறிப்­பிட்­ட­னர்.

கொரோனா கிரு­மித்தொற்று கார­ண­மாக 20 பேர் பலி­யாகி இருப்­ப­தா­க­வும் அது கூறி­யது. அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் 177 பேருக்­கும் கேர­ளா­வில் 165 பேருக்­கும் கிருமி பாதிப்பு உள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மகா­ராஷ்­டி­ரா­வில் ஐவ­ரும் குஜ­ராத்­தில் மூன்று பேரும் மர­ண­மடைந்துவிட்­ட­னர். கர்­நா­டகா, மத்தி­யப் பிர­தே­சம் ஆகிய மாநிலங்­களில் இரண்டு பேரும் பீகார், பஞ்­சாப் உள்­ளிட்ட இதர மாநி­லங்­களில் தலா ஒரு­வ­ரும் பலி­யா­யி­னர் என்று அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் குறிப்­பிட்டுள்ளன.

கேர­ளா­வில் அதி­க­மான மக்­கள் பாதிக்­கப்­பட்டு இருந்­தா­லும் நேற்று­தான் அங்கு முதன்­மு­த­லாக 69 வயது முதி­ய­வர் ஒரு­வர் மாண்­டார் என்­றும் அவ­ரை­யும் சேர்த்து நாட்­டில் மொத்­தம் 20 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­குத் பலி­யாகி விட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில், அனைத்து மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளின் தலை­மைச் செய­லா­ளர்­களுக்கு மத்­திய அமைச்­ச­ரவை செய­லா­ளர் ராஜீவ் கவுபா அவ­ச­ரக் கடி­தம் ஒன்றை அனுப்­பி­னார்.

இந்­தி­யா­வுக்­கு கடந்த 2 மாதங்­களில் 15 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட அனைத்­து­ல­கப் பய­ணி­கள் வந்து உள்­ள­னர். ஆனால் அவர்­க­ளின் எண்­ணிக்­கைக்­கும் கொரோனா கிருமி தொடர்­பாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கைக்­கும் அதிக வேறு­பாடு இருக்­கிறது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த பல­ருக்­கும் கொரோனா கிரு­மித்­தொற்று உறு­தி­யான நிலை­யில் இந்த வேறு­பாடு கவ­னிக்­க­வேண்­டிய ஒன்­றாக இருக்­கிறது என்­றும் இதில் உட­ன­டி­யா­கக் கவ­னம் செலுத்­தும்­ப­டி­யும் அந்­தக் கடி­தம் மாநி­லங்­களை வலி­யு­றுத்­தி­யது.

இத­னி­டையே, கொரோனா சமூ­கத் தொற்­றாக பரி­ண­மிக்­கும் ஆபத்­துள்­ள­தால் அதைச் சமா­ளிக்­கும் விதத்­தில் இந்­தியா முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கைகளில் கவ­னம் செலுத்­த­த் தொ­டங்­கி­யது.