கேரளாவில் 2வது மரணம்; மருத்துவ கண்காணிப்பில் ஒன்றரை லட்சம் பேர்

கேரளாவில் 2வது மரணம்; மருத்துவ கண்காணிப்பில் ஒன்றரை லட்சம் பேர்

2 mins read
99619dc1-033d-4019-9241-e51444637b9f
கேரள மாநி­லத்­தில் 2வது கிரு­மித்­தொற்று உயி­ரி­ழப்பு நிகழ்ந்­துள்­ளது. சிகிச்சை பெற்று வந்த 68 வயது முன்­னாள் போலிஸ் அதி­காரி உயி­ரி­ழந்­தார்.  திரு­வ­னந்­த­பு­ரத்­தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலை­வில் இருக்­கும் புத்­தன்­கோடு பகு­தி­யைச் சேர்ந்த 68 வய­தான அப்­துல் அஜீஸ் என மாண்­ட­வ­ரின் அடை­யா­ளம் வெளி­யி­டப்­பட்டு உள்­ளது. படம்: ஏஎஃப்பி -

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லத்­தில் 2வது கிரு­மித்­தொற்று உயி­ரி­ழப்பு நிகழ்ந்­துள்­ளது. சிகிச்சை பெற்று வந்த 68 வயது முன்­னாள் போலிஸ் அதி­காரி உயி­ரி­ழந்­தார்.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலை­வில் இருக்­கும் புத்­தன்­கோடு பகு­தி­யைச் சேர்ந்த 68 வய­தான அப்­துல் அஜீஸ் என மாண்­ட­வ­ரின் அடை­யா­ளம் வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

இதற்கு முன் கொச்சி அருகே சுல்­லிக்­கல் பகு­தி­யைச் சேர்ந்த முதி­ய­வர் ஒரு­வர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தார். அது­தான் அம்­மா­நி­லத்­தில் ஏற்­பட்ட முதல் கொரோனா மர­ணம்.

கேரள மாநி­லத்­தில் இது­வரை 213 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது. திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் 32 பேருக்கு கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தாக அரசு சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

அதில் காசர்­கோடு மாவட்­டத்­தில் மட்­டும் 17 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். கேரள மாநி­லத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் காசர்­கோடு மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­கி­டையே கேர­ளா­வில் வய­தான தம்­பதி கிருமி பாதிப்­பி­லி­ருந்து குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். பத்­தி­னம்­திட்டா மாவட்­டம் கோட்­ட­யத்­தில் உள்ள மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த தாமஸ் (93), மரி­யம்மா(88) ஆகி­யோர் அவர்­கள். அதே சமயம் இவர்களுக்கு சிகிச் சையில் உதவிய தாதிக்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்­க­ளோடு தொடர்­பிலிருந்த குடும்ப உறுப்­பி­னர்­க­ளான இத்­தா­லி­யி­லி­ருந்து திரும்­பிய இவர்­க­ளின் மகன், மரு­ம­கள், பேரன், பேத்­தி­கள் ஆகி­யோ­ருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்டு அவர்­கள் சிகிச்­சை­யில் இருந்­த­னர். அவர்­களும் குண­ம­டைந்­த­தால் வீட்­டுக்கு அனுப்­பப்­பட்­ட­னர்.

மாநிலம் முழுவதும் 1,57,253 பேர் மருத்துவக் கண்காணிப்பின்கீழ் இருப்பதாகவும் 623 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.