ஊரடங்கை 'கண்காணித்த' யானை

ஊரடங்கை 'கண்காணித்த' யானை

1 mins read
5e7d6aaa-d0b0-4a41-9871-d2a255e41816
ஊரே அடங்கிக் கிடக்க ஒய்யாரமாய் நடந்து சென்ற யானை. படங்கள்: சமூக ஊடகக் காணொளி -

வய­நாடு: இந்­திய வனத் துறை அதி­காரி சுதா ராமன் சமூக ஊட­கத்­தில் காணொளி ஒன்றை பகிர்ந்­துள்­ளார். ஊர­டங்­கால் அமை­தி­யாக இருக்­கும் சாலை­யில் யானை ஒன்று எந்தவித சல­ன­மும் இல்­லா­மல் நடந்து செல்­வது அந்த காணொ­ளி­யில் தெரி­கிறது.

கேரள மாநி­லம் வய­நாடு அருகே எடுக்­கப்­பட்ட இந்த காணொ­ளி­யில், நடந்து சென்ற யானை சிறிது தூரம் வந்து கடை­களை சுற்­றும் முற்­றும் மேற்­பார்­வை­யி­டு­வது போல பார்க்­கிறது. பின்­னர் மீண்­டும் நடந்து செல்­கிறது.

அதனை சுதாராமன், "ஊர­டங்கு உத்­த­ரவு முறை­யாக பின்­பற்­றப்­ப­டு­கி­றதா என்­பதை மேற்­பார்­வை­யி­டும் யானை," என வேடிக்­கை­யா­கக் குறிப்­பிட்டு உள்­ளார். இக்­கா­ணொ­ளியை ஒரே நாளில் 1.20 லட்­சம் பேர் பார்த்­துள்­ள­னர்.

அண்­மை­யில் இதே­போன்ற காணொளி ஒன்று வெளி­யா­னது, ஹரித்­து­வா­ரில் எடுக்­கப்­பட்ட அந்த காணொ­ளி­யில் இரவு நேரத்­தில் ஆள் அர­வ­மற்ற சாலை­யில் யானை ஒன்று வேக­மாக நடந்து சென்­றது.

மக்­கள் வீட்­டுக்­குள் முடங்­கிக் கிடக்­கும் வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி யானை­கள் வெளி­யில் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அத­னால் யாருக்­கும் எந்­தத் தொந்­த­ர­வும் ஏற்­ப­ட­வில்லை.