வெளிநாடு சென்று திரும்பிய 42 பேர் எங்கே?

வெளிநாடு சென்று திரும்பிய 42 பேர் எங்கே?

1 mins read
1b68949f-2ee6-49ea-b230-664f0ee73c26
கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்பை அறிய குஜ­ராத்­தில் இருந்து வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று திரும்­பிய 27,000 பேரின் பெயா் பட்­டி­யலை மாநில அர­சி­டம் மத்­திய அரசு வழங்­கி­யி­ருந்­தது. படம்: ஏஎப்பி -

சூரத்: கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்பை அறிய குஜ­ராத்­தில் இருந்து வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று திரும்­பிய 27,000 பேரின் பெயா் பட்­டி­யலை மாநில அர­சி­டம் மத்­திய அரசு வழங்­கி­யி­ருந்­தது.

அதன்­படி அவா்க­ளது பாஸ்­போர்ட்­டில் குறிப்­பிட்ட முக­வ­ரி­யி­லுள்­ள­வா்­களும் அவா்க­ளின் உடல்­நி­லை­யும் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவர்­களில், சூரத்­தைச் சேர்ந்த 42 பேரின் முக­வ­ரியை சோத­னை­யிட்­ட­போது பாஸ்­போர்ட்­டில் குறிப்­பிடப்பட்ட முக­வ­ரி­யில் அவா்கள் வசிக்­க­வில்லை என மாவட்ட சுகா­தார அதி­காரி ஒருவா் தெரி­வித்தாா்.

காணா­மல் போன இந்த 42 பேரும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து திரும்­பி­ய­போது மும்பை, பெங்­க­ளூரு, லக்னோ, சென்னை போன்ற விமான நிலை­யங்­களில் வந்­தி­றங்­கி­ய­தா­க­வும் அந்த அதி­காரி தெரி­வித்தாா்.