பெங்களூரு: பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா கிருமி பரவும் வாய்ப்பு அதிகம் இருக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டு அவற்றை சிவப்பு மண்டலம் அல்லது அபாயப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெங்களூரு உள்ளிட்ட 16 இடங்களில் கிருமி பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களாக அறிவித்தது தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் மைசூரு, உத்தர கன்னடா, பெங்களூரு, தட்சிண கன்னடா மற்றும் சிக்கபல்லப்பூர் ஆகிய பகுதிகளை சிவப்பு மண்டலமாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இப்பகுதிகளைச் சுற்றியிருக்கும் சில கிராமங்களும் அபாய பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து கர்நாடக மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், ஏற்கனவே இந்த பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 20 லட்சம் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் வந்துபோகும் இடம் என்பதால் பெங்களூருவில் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் மேலும் கண்காணிப்பு தீவிரப்
படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மாநில அரசு சில பகுதிகளை சிவப்பு மண்டலமாக அறிவித்திருப்பதால் அப்பகுதிகளுக்கு கூடுதல் கண்காணிப்பு வழங்க ஏதுவாகிறது என்றும் அவர் கூறினார்.

