குவைத்: மத்திய கிழக்கு நாடான குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த 24 பேரை கொரோனா கிருமி பாதித்து உள்ளது.
வளைகுடாவில் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நிலை குறித்து இந்தியா கவலை அடைந்து உள்ளது.
இந்நிலையில், அங்கு கடந்த சில நாட்களில் புதிதாக 28 பேருக்குக் கொரோனா கிருமி தொற்றியதாகவும் அவர்களில் 24 இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மற்றவர்கள் பங்ளாதேஷ், நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களையும் சேர்த்து குவைத்தில் கொரோனா கிருமிப் பாதிப்பு எண்ணிக்கை 317 ஆகிவிட்டதாகவும் குவைத் சுகாதார அமைச்சு கூறியதாக குவைத் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.