புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கொடூரம் அதிகரித்துவரும் நிலையில், அந்தக் கிருமியை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் தொகையை அவசரகால நிதியாக வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைச் சமாளிக்க இந்தியா தொலைநோக்குக் கண்ணோட்டத்துடன் துணிச்சலாக ஊரடங்கை முன்னதாகவே விதித்து இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்த்துறை சிறப்புத் தூதர் டாக்டர் டேவிட் நபாரோ பாராட்டினார்.
என்றாலும் கொரோனா விரைவில் மறையும் என்பதற்கு இதுவரை அறிகுறி தெரிய வில்லை இல்லை என்றும் அவர் கூறினார்.