புதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு முடிந்த பின்னர் ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு அனைத்துலக விமானங்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருந்தாலும் எந்தெந்த நாடுகளிலிருந்து விமானங்கள வர அனுமதிக்கப்படும் என்பது சூழலுக்கு ஏற்றபடி தீர்மானிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங்புரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை ஏற்றி வரும் விமானங்கள், ஊரடங்கு காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஊரடங்கு முடிந்த பிறகு மேற்கொள்ளும் விமானப் பயணங்களுக்கான முன்பதிவுகளை விமானச் சேவை நிறுவனங்கள் இப்போதே ஏற்கலாம் என்றும் ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் முன்பதிவுகளை ரத்து செய்ய வேண்டியநிலை வரும் என்றும் விமானப் போக்குவரத்து துறைச் செயலர் பிரதீப் சிங் கரோலா கூறினார்.
இதனிடையே, சீனாவின் ஷாங்காய் நகரத்திலிருந்து மருந்துப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வரும் வகையில் சரக்கு விமானச் சேவைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து புதுடெல்லியிலிருந்து ஷாங்காய்க்கு இன்றும் நாளையும் சரக்கு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ராஜீவ் பன்சால் தெரிவித்தார்.