புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மோத்தம் 56 பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிருமி பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று அது குறிப்பிட்டது.
கொரோனா கிருமி பாதித்தவர்களில் 157 பேர் சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டனர்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.