112 பிரான்ஸ் குடிமக்கள் தாயகம் திரும்பினர்

கொச்சி: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 112 பேரை சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு.

இவர்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில தினங்களாக கேரளாவில் சிக்கித் தவித்தனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்க நேர்ந்தது.

தங்கள் குடிமக்களைத் தாயகம் திரும்ப அனுமதிக்குமாறு சில நாடுகள் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன.இதையடுத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் ஊரடங்கு உத்தரவால் கேரளாவில் சிக்கித் தவித்த 112 பிரான்ஸ் நாட்டவர்கள் சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சிறப்பு விமானம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!