கொரோனா கிருமித் தொற்று: இந்தியாவில் நூறு பேருக்கு மேல் மரணம்

கொரோனா கிருமித் தொற்று: இந்தியாவில் நூறு பேருக்கு மேல் மரணம்

1 mins read
21eadc51-4584-4de7-bd51-ac48a369c9d4
திருபபூரில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி குளியல் சுரங்கத்தைப் போல் இப்போது நாட்டின் பல நகர்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அகமதாபாத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கிருமி நாசினிக் குளியல் சுரங்கம் இது. படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நேற்­றுக் காலை 9 மணி நில­வ­ரப்­படி கொரோனா கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 109ஆக­வும் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 4,067ஆக­வும் உயர்ந்­து­விட்­ட­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த 12 மணி நேரத்­தில் மட்­டும் புதி­தாக 490 பேரைக் கிருமி தொற்­றி­ய­தாக அமைச்­சு கூறி­யது. இது­வரை 291 பேர் கிரு­மித்­தொற்­றில் இருந்து விடு­பட்­டு­விட்­ட­னர்.

இந்­தி­யா­வில் மொத்­த­முள்ள 36 இந்­திய மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களில் 30ல் கிரு­மித்­தொற்­றும் மர­ணங்­களும் பதி­வாகி­ உள்­ளன. அவற்­றில் ஆக அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது மகா­ராஷ்­டிர மாநி­லம்­தான். அங்கு இது­வரை 690 பேரைக் கிருமி தொற்­றி­விட்­டது. தமிழ்­நாடு (571) இரண்டாம் இடத்திலும் டெல்லி (503) மூன்­றா­மி­டத்­தி­லும் உள்­ளன.

உயி­ரி­ழப்­பி­லும் மகா­ராஷ்­டிர மாநி­லமே முத­லி­டத்­தில் உள்­ளது. கிரு­மித்­தொற்­றால் அங்கு இது­வரை 45 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். குஜ­ராத்­தில் 11 பேரும் மத்­தி­யப்­ பி­ர­தேத்­தில் ஒன்­பது பேரும் டெல்லி, தெலுங்­கா­னா­வில் தலா எழு­வ­ரும் பஞ்­சா­பில் அறு­வ­ரும் உயி­ரி­ழந்­த­னர். தமிழ்­நாட்­டி­லும் கர்­நா­ட­கா­விலும் தலா ஐவர் மாண்­டு­விட்­ட­னர்.

டெல்­லி­யில் இடம்­பெற்ற சமய நிகழ்­வில் பங்­கேற்­ற­வர்­களில் மட்­டும் ஆயி­ரம் பேருக்­கு­மேல் கிருமி தொற்­றி­யி­ருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், அதில் பங்­கேற்ற கிட்­டத்­தட்ட 25,500 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இப்­போ­தைக்கு இந்­திய மருத்­துவ ஆய்­வுக் கழ­கத்­தின்­கீழ் அர­சாங்க மருத்­துவ ஆய்­வ­கங்­களில் நாளொன்­றுக்கு 10,000 பேருக்­குக் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. இந்த எண்­ணிக்கை இன்­னும் மூன்று நாட்­களில் 20,000ஆக உய­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.