அரசின் உதவி நடவடிக்கைகள் பற்றி அறிந்திராத புலம்பெயர் தொழிலாளர்கள்

புது­டெல்லி: மத்­திய, மாநில அரசு­களின் அவ­ச­ர­கால உதவி நட­வடிக்­கை­கள் குறித்து 60 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்ட புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­கள் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­பது ‘ஜன் சகாஸ்’ எனும் அற­நி­று­வ­னம் மேற்­கொண்ட கருத்­தாய்­வின்­மூ­லம் தெரி­ய­வந்து இருக்­கிறது.

அந்த அமைப்பு கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தொலை­பேசி வழி­யாக 3,196 பேரைத் தொடர்­பு­கொண்டு, அர­சின் நிவா­ரண நட­வ­டிக்­கை­கள் குறித்து கேட்­ட­றிந்­தது. அந்த ஆய்வு முடி­வு­கள் ‘புல­னா­காக் குடி­மக்­க­ளின் குரல்­கள்’ என்ற தலைப்­பில் அறிக்­கை­யாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அதில், ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் 62 விழுக்­காட்­டி­னர் அர­சாங்­கத்­தின் அவ­ச­ர­கால நல்­வாழ்வு நட­வ­டிக்­கை­கள் பற்றி அறிந்­தி­ருக்­க­வில்லை. அவற்­றைப் பற்றி அறிந்­தி­ருந்­தா­லும் எங்கு சென்று, யாரி­டம் உதவி கேட்­பது எனத் தெரி­ய­வில்லை என 37 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

பெரும்­பா­லும் ஆண்­க­ளி­டமே இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது. அவர்­கள் அனை­வ­ரும் வட­மா­நி­லங்­களைச் சேர்ந்­த­வர்­கள்.

ஆய்­வில் பங்­கேற்ற தொழி­லா­ளர்­களில் 55 விழுக்­காட்­டி­னர் நாளொன்­றுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை வரு­மா­னம் ஈட்டி வந்­த­தா­க­வும் அந்­தப் பணமே சரா­சரி­யாக நான்கு பேரைக் கொண்ட தங்­க­ளது குடும்­பத்­திற்கு ஆதா­ரம் என்­றும் சொன்­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. 33 விழுக்காட்டினர் அரசாங்கத்தின் முடக்கநிலை அறிவிப்பால் நகரங்களில் சிக்கிக் கொண்டதாகவும் உணவு, குடிநீர், பணமின்றி தவித்து வருவதாகவும் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!