இந்தியாவுக்கு ஒளியூட்டிய தாதியர்கள்

இந்தியாவுக்கு ஒளியூட்டிய தாதியர்கள்

1 mins read
9e0ac798-45cc-4571-8660-c43d8cfeb976
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தாதியர்களும் சுகாதாரத் துறை ஊழியர்களும் அகல் விளக்குகளை ஏந்தி பவனி வந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

சென்னை: பிர­த­மர் மோடி­யின் வேண்­டு­கோளை ஏற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு நாட்டு மக்­கள் வீட்­டில் அகல் விளக்­கு­களை ஏற்­றி­னர்.

இந்­நி­லை­யில் சென்­னை­யில் உள்ள சுனாமி குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் ஒரு­சி­லர் ராக்­கெட் பட்­டா­சு­களை வெடித்­த­போது திடீர் தீவி­பத்து ஏற்­பட்­டது. எனி­னும் இதில் யாருக்­கும் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை.

ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு தமி­ழ­கம் முழு­வ­தும் பொது­மக்­கள் அகல்­வி­ளக்கு, மெழு­கு­வர்த்தி, டார்ச் லைட் மூலம் ஒளி ஏற்­ப­டுத்­தும் நிகழ்­வில் பங்­கேற்­ற­னர்.

நடி­கர் ரஜினி உட்­பட பல பிர­ப­லங்­களும் வீடு­களில் ஒளி­யேற்றி, அது தொடர்­பான புகைப்­ப­டங்­கள், காணொ­ளி­களை சமூக வலைத்­தளங்­களில் பகிர்ந்து கொண்­ட­னர்.

சென்னை, எண்­ணூர் பகு­தி­யில் சிலர் பட்­டா­சு­கள் வெடித்­த­னர். இதில் ராக்கெட் பட்டாசு ஒன்று காலி இடத்தில் விழுந்து தீப்பற்றியது. அப்பகுதியில் காய்ந்துபோன மரத்துண்டுகள், பொருட்கள் அதிகமிருந்ததால் தீ மளமளவென பரவி பெரிதானது. பொதுமக்கள் ஏதோ விபரீதம் நிகழ்ந்ததாகக் கருதி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இது குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.