கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,000ஐ நெருங்கியது

கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,000ஐ நெருங்கியது

2 mins read
2242e784-1d40-4b28-9db8-f71ca22579f9
வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படம்: தகவல் ஊடகம் -

சென்னை: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 5,961 ஆக உள்ளது. உயி­ரி­ழந்தோர் எண்­ணிக்கை 166ஆக அதி­க­ரித்­துள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் நாடு முழு­வ­தும் 540 பேருக்கு நோய் தொற்­றி­ய­தா­க­வும் ஒரே நாளில் 17 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்­றும் அந்த அமைச்சு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது­வரை 473 பேர் உரிய சிகிச்­சைக்­குப் பிறகு கொரோனா கிரு­மித் தொற்­றி­லி­ருந்து முழு­மை­யா­கக் குண­ம­டைந்­துள்­ள­னர்.

புதன்­கி­ழமை மட்­டும் மகா­ராஷ்­டி­ரா­வில் 8 பேரும் குஜ­ராத்­தில் 3 பேரும் ஜம்மு காஷ்­மீ­ரில் இரு­வ­ரும் பஞ்­சாப் உத்­த­ர­ப் பி­ர­தே­சம், கர்­நா­டகா, தமி­ழ­கத்­தில் தலா ஒரு­வ­ரும் உயி­ரி­ழந்­துள்­ள­னர். நாடு முழு­வ­தும் 5,734 பேர் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் மகா­ராஷ்­டிர மாநி­லம் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் முத­லி­டம் பிடித்­துள்­ளது.

அங்கு இது­வரை 22 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். குஜ­ராத்­தில் 16, மத்­தி­ய­ப்பி­ர­தே­சத்­தில் 13, டெல்­லி­யில் 9, பஞ்­சாப், தமி­ழ­கத்­தில் தலா 8 பேர், தெலுங்­கா­னா­வில் 7 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். மேற்கு வங்­கத்­தில் 5 பேரும் ஆந்­திரா, உத்­த­ர­ப்பி­ர­தேசம், ஜம்மு காஷ்­மீ­ரில் நால்­வ­ரும் பலி­யாகி உள்­ள­னர்.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகமானோர் கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 1,135 பேருக்கு 'கொவிட் 19' நோய் தாக்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.