கர்நாடகாவை கலங்க வைக்கும் கொரோனா: 181 பேருக்கு பாதிப்பு

கர்நாடகாவை கலங்க வைக்கும் கொரோனா: 181 பேருக்கு பாதிப்பு

2 mins read
4ec4f570-8b82-47bb-95d7-e08418940684
கொவிட்-19 ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி காணப்படும் பெங்களூரில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்குச் செல்கின்றனர். படம்: ஏஎப்பி -

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் 181 பேருக்கு கொரோனா கிரு­மித் தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அங்கு இது­வரை 6 பேர் இந்­தப் பாதிப்­பால் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து ஊர­டங்கு உத்­த­ரவை நீட்­டிக்க அம்­மா­நில எதிர்க்­கட்­சி­கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

அங்கு நேற்று அதி­காலை 1 மணி அள­வில் 80 வய­துப் பெண்­மணி கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்­பால் உயி­ரி­ழந்­தார். இதய நோய் மற்­றும் சுவா­சக் கோளாறு கார­ண­மாக அண்­மை­யில் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட அந்­தப் பெண்­ம­ணிக்கு கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது கடந்த 6ஆம் தேதி உறுதி செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து அவ­ரைத் தனி­மைப்­ப­டுத்தி சிகிச்சை அளித்து வந்­த­னர். எனி­னும் சிகிச்சை பல­னின்றி அவர் நேற்று அதி­காலை உயி­ரி­ழந்­தார்.

இந்­நி­லை­யில் கர்­நா­ட­கா­வில் ஊர­டங்கு உத்­த­ரவை நீட்­டித்­தால் அதற்கு காங்­கி­ரஸ் கட்சி ஆத­ரவு தெரி­விக்­கும் என அம்­மா­நில எதிர்க்­கட்­சித் தலை­வர் சித்­த­ரா­மையா கூறி­யுள்­ளார்.

பெங்­க­ளூ­ரு­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கர்­நா­ட­கா­வில் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை 30 விழுக்­காடு வரை அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் இத­னால் ஏழை மற்­றும் நடுத்­தர மக்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும் சுட்­டிக் காட்­டி­னார்.

இவ்­வி­ஷ­யத்­தில் முதல்­வர் எடி­யூ­ரப்பா கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்­றார் சித்­த­ரா­மையா.

இதற்­கி­டையே ஊர­டங்கு உத்­த­ரவு குறித்து மாநி­லங்­களே முடிவெடுக்க பிர­த­மர் மோடி அனு­ம­தித்­தால் கர்­நா­ட­கா­வில் கொரோனா கிருமி பாதிப்­பில்­லாத மாவட்­டங்­களில் ஊர­டங்கு உத்­த­ரவு திரும்­பப் பெறப்­படும் என அம்­மா­நில முதல்­வர் எடி­யூ­ரப்பா தெரி­வித்­துள்­ளார்.

அதே­ச­ம­யம் ஒரு மாவட்­டத்­தில் இருந்து இன்­னொரு மாவட்­டத்­துக்கு சென்­று­வர மக்­கள் அனு­ம­திக்­கப்­பட மாட்­டார்­கள் என்­றார் அவர். மேலும், கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்களில் ஊரடங்கைத் திரும்பப் பெற்றால் பெரிய அளவில் கிருமித்தொற்றுப் பரவல் ஏற்படும் என்றும் அதன் விளைவுகளை கற்பனை செய்து கூடப் பார்க்க இயலாது என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.