கேரளாவில் பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொவிட்-19 சிகிச்சை

கேரளாவில் பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொவிட்-19 சிகிச்சை

1 mins read
c02c4f9e-2566-4d93-95f1-353cf44ae9f6
சோதனை அடிப்­ப­டை­யில் கேர­ளா­வுக்கு இச்­சி­கிச்சை முறை­யைப்  பின்­பற்ற இந்­திய மருத்­துவ ஆராய்ச்­சிக் கழ­கம் அனு­மதி வழங்­கி­யுள்­ளதை அடுத்து, தமி­ழ­கம், கர்­நா­டகா உள்­ளிட்ட மாநி­லங்­களும் அதற்­கான முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளன. கேரளாவின் எர்ணாகுளம் நகரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொவிட்-19 பாதிப்புச் சோதனையில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர். படம்: ராய்ட்டர்ஸ் -

திரு­வ­னந்­தபுரம்: 'கொவிட் 19' நோயா­ளி­க­ளைக் குணப்­ப­டுத்த பிளாஸ்மா சிகிச்சை முறை­யைப் பின்­பற்ற கேரள அரசு தீர்­மா­னித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக இந்­திய மருத்­துவ ஆராய்ச்­சிக் கழ­கத்­தின் அனு­ம­தி­யைப் பெற்­றுள்­ளது.

கொரோனா கிரு­மித் தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­த­வர்­க­ளின் ரத்­தத்­தில் இருந்து குறிப்­பிட்ட அணுக்­க­ளைப் பிரித்­தெ­டுத்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட அணுக்­கள் அடை­யா­ளம் காணப்­படும். பின்­னர் அந்த அணுக்­கள் நொய்த்­தொற்று உள்­ள­வர்­க­ளின் உட­லில் செலுத்­தப்­படும். இதை பிளாஸ்மா சிகிச்சை முறை என்று குறிப்­பி­டு­கி­றார்­கள்.

இச்­சி­கிச்சை முறைக்கு நல்ல பலன் கிடைப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து கேர­ளா­வில் இந்­தச் சிகிச்சை முறை­யைப் பயன்­ப­டுத்த அம்­மா­நில அரசு முடிவு செய்­தி­ருக்­கிறது.

அமெ­ரிக்கா, சீனா, தென்­கொரியா உள்­ளிட்ட நாடு­களும் இந்­த சிகிச்சை முறை குறித்து ஆராய்ந்து வரு­கின்­றன. எபோலா, சார்ஸ், பன்­றிக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இந்­த சிகிச்சை முறை­தான் கைகொ­டுத்­தது என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சோதனை அடிப்­ப­டை­யில் கேர­ளா­வுக்கு இச்­சி­கிச்சை முறை­யைப் பின்­பற்ற இந்­திய மருத்­துவ ஆராய்ச்­சிக் கழ­கம் அனு­மதி வழங்­கி­யுள்­ளதை அடுத்து, தமி­ழ­கம், கர்­நா­டகா உள்­ளிட்ட மாநி­லங்­களும் அதற்­கான முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளன.