புதுடெல்லி: கொரோனா தடுப்பு, ஊரடங்கு விலக்கு, பொருளாதாரச் சீரமைப்பு ஆகியவை குறித்து வியாழனன்று உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது உயிர்களைக் காப்பதிலும் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் சமமான கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மக்களின் உயிரும் காப்பாற்றப்பட வேண்டும். அதே சமயத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டியதும் முக்கியம் என பிரதமரிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி சில யோசனைகளையும் அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறுகிறார்கள்.
பொருளாதார நடவடிக்கைகளும் புத்துயிர் பெற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், ஏனெனில் துறைமுகங்கள் கொள்
கலன்களால் நிரம்பி வழிகின்றன, மேலும் மும்பை மற்றும் சென்னை போன்ற முக்கிய துறைமுக நகரங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டியதன் பொருட்டு இந்தியாவை மூன்று மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும். சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலங்களாகப் பிரிக்க யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மண்டலத்தில் எந்தவொரு நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது. கணிசமான எண்ணிக்கையிலான பாதிப்புகள் கண்டறியப்பட்ட மாவட்டங்கள் அல்லது கிருமிக் குழுமங்கள் அறிவிக்கப்பட்ட பகுதிகள் அடங்கும்.
ஆரஞ்சு மண்டலம்: குறைந்த பொதுப் போக்குவரத்தை அனுமதித் தல், பண்ணைப் பொருட்களை அறுவடை செய்வது போன்ற குறைந்தபட்ச நடவடிக்கைகள் ஆரஞ்சு மண்டலங்களில் அனுமதிக்கப்படும்.
பச்சை மண்டலம்: இங்கு ஊரடங்கு மேலும் தளர்வைக் காணும். பசுமை மண்டலத்தின்கீழ் வரும் சில எம்எஸ்எம்இ தொழில்கள் சமூக இடைவளியை சரியாகப் பராமரிக்கும் ஊழியர்களுக்கான உள்தங்குமிட வசதிகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று இந்திய அரசாங்கச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

