திருச்சூர் பூரம் திருவிழா 58 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து

திருச்சூர் பூரம் திருவிழா 58 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து

1 mins read
aa701b58-c9d5-41ab-b671-529db6a17099
மே 3ஆம் தேதி நடை­பெ­ற­வி­ருந்த பூரம் திரு­விழா கொரோனா கிருமி பாதிப்­பால் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. மக்­கள் கூட்­ட­மா­கக் கூடு­வ­தைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.படம்: ஊடகம் -

திரு­வ­னந்­த­பு­ரம்: உல­கப் புகழ்­பெற்ற திருச்­சூர் பூரம் திரு­விழா கொரோனா பாதிப்­பால் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆராட்­டு­புழா கோயி­லில் நடை­பெ­றும் பூரம் விழா­வில் திருச்­சூர் மற்­றும் அதனை சுற்­றி­யுள்ள பகு­தி­களில் உள்ள யானை­க­ளின் அணி­வ­குப்பு நடை­பெ­றும். செண்­ட­மே­ளம், கலை நிகழ்ச்­சி­கள் என களை­கட்­டும்.

இந்த விழா­வில் நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் இருந்து லட்­சக்­க­ணக்­கான மக்­கள் கலந்து கொள்­வது வழக்­கம்.

இந்­நி­லை­யில், மே 3ஆம் தேதி நடை­பெ­ற­வி­ருந்த பூரம் திரு­விழா கொரோனா கிருமி பாதிப்­பால் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. மக்­கள் கூட்­ட­மா­கக் கூடு­வ­தைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கு­முன்பு 1962ஆம் ஆண்டு இந்­தியா- சீனா இடையே ஏற்­பட்ட போரின் போது பூரம் திரு­விழா ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.

அதன் பின்­னர் கிட்­டத்­தட்ட 58 ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக தற்­போது பூரம் திரு­விழா கொண்­டாட்­டம் தடை­பட்­டுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.