பெங்களூரு: கர்நாடகாவின் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமாரும் அவரது மனைவியும் தங்களின் வீட்டைச் சுற்றி உள்ள தெருக்களை சுத்தம்செய்து உள்ளனர்.
அது தொடர்பான காணொளி படங்களை பெங்களூரு மகாநகர் பாலிகே (பிபிஎம்பி) ஆணையர் பி.எச்.அனில்குமார் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
"உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கும் உழைப்பின் கௌரவத்தை நிலைநிறுத்துவதற்கும் இது நல்லதொரு செயல். தங்களின் இந்தச் செயலுக்காக மரியாதைக்குரிய அமைச்சரான உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நன்றி," என்று ஆணையாளர் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
அமைச்சர் மற்றும் அவரது மனைவியின் சமூகச் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

