இந்தியாவில் தங்க அமெரிக்கர்கள் விருப்பம்

இந்தியாவில் தங்க அமெரிக்கர்கள் விருப்பம்

1 mins read
d9d7fd68-49b2-414c-8454-6d497ebb6b57
அகமதாபாத்தில் வீடற்ற மக்கள், இந்த ஊரடங்கு நேரத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் புறநகர்ப்பகுதிகளில் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக படு­மோ­சமாக பாதிக்­கப்­பட்­டுள்ள நாடாக அமெரிக்கா ஆகி­விட்­டது. அதே வேளை­யில், பாதிப்­பு­கள் இருக்­கும் போதி­லும் கொரோ­னா­வைக் கட்டுப்­ப­டுத்­து­வ­தில் இந்­தியா உல­கின் பாராட்­டைப் பெற்­று­வ­ரு­கிறது.

மனி­தா­பி­மான அடிப்­படை­யில் மலேரியா மாத்­தி­ரை­களை அமெ­ரிக்­கா­வுக்கு இந்­தியா அனுப்பிவரு­கி­ற­து.

கொரோனா கார­ண­மாக பல நாடு­கள், வேறு நாடு­களில் சிக்கி இருக்­கும் தங்­கள் மக்­களைக் கூடு­மானவரை­யில் மீட்டு வரு­கின்­றன.

இந்த நட­வ­டிக்­கையை ஒட்டி ஆஸ்­தி­ரே­லியா இந்­தி­யா­வில் இருந்து தன் நாட்­டி­னர் 444 பேரை தனி விமா­னம் மூலம் புது­டெல்­லி­யில் இருந்து மெல்­பர்ன் நக­ருக்­குக் கொண்டு சென்­றது.

அதே­போல் அமெ­ரிக்­கா­வும் சிறப்பு விமானச் சேவை­களை அறி­வித்­தது. 50,000 அமெ­ரிக்­கர்­கள் அமெ­ரிக்கா திரும்­பி இருக்­கி­றார்­கள் என்று அந்த நாட்­டின் அதி­பர் தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் இந்­தி­யா­வில் இருக்­கும் பெரும்­பா­லான அமெ­ரிக்­கர்­கள் தங்­கள் நாட்­டுக்­குச் செல்ல விரும்­பா­மல் இந்­தியாவிலேயே தங்கி இருக்க விரும்­பு­வ­தாக அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் குறிப்பிட்டனர்.

அமெரிக்­கர்­க­ளைப் போலவே இதர நாட்­டி­னர் பல­ரும் இவ்­வாறே விரும்புவதா­கத் தெரி­கிறது.

இந்­தி­யா­வில் இன்­ன­மும் 24,000 அமெ­ரிக்­கர்­கள் இருப்­ப­தாகவும் அவர்­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள தாங்­கள் முயன்­று­ வ­ரு­வ­தா­க­வும் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சு அதி­காரி இவான் புர­வுன்லி தெரி­வித்­தார்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக அமெ­ரிக்கா மோச­மாக பாதிக்­கப்­பட்­டு உள்­ளதே இதற்குக் கார­ணம் என்று கூறப்பட்டுள்ளது.