அரசு: 25 மாவட்டங்களில் புதுத்தொற்று இல்லை

அரசு: 25 மாவட்டங்களில் புதுத்தொற்று இல்லை

2 mins read
3330c0b2-6aa5-4471-af74-7449a8586451
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஜமா பள்ளிவாசலுக்கு அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்பு அதி­க­ரித்து வரும் நிலை­யில் 25 மாவட்­டங்­களில் மட்­டும் கடந்த இரு வாரங்­களில் யாருக்­கும் புதி­தாக கிரு­மித் தொற்று ஏற்­ப­ட­வில்லை என தெரி­ய­வந்­துள்­ளது.

டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசிய மத்­திய சுகா­தா­ரத் துறை இணைச் செய­லர் லவ் அகர்­வால், 15 மாநி­லங்­களில் உள்ள குறிப்­பிட்ட அந்த 25 மாவட்­டங்­களில் முன்­ன­தா­கவே துரித நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தால் நோய்த்­தொற்று பர­வ­வில்லை என்­றார்.

இது ஒரு நல்ல செய்தி என்­றும் லவ் அகர்­வால் குறிப்­பிட்­டார்.

"அடுத்த ஆறு வாரங்­க­ளுக்கு மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­வ­தற்­கான அனைத்­துக் கரு­வி­களும் நம்­மி­டம் தயா­ராக உள்­ளன. எனவே, இவ்­வி­ஷ­யத்­தில் நாம் கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை.

"மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் உள்ள கோண்­டியா, புதுச்­சே­ரி­யில் உள்ள மாஹே, பீகா­ரின் பாட்னா, நலந்தா, முங்­கர், கேர­ளா­வின் கோட்­ட­யம், வய­நாடு உள்­ளிட்ட 25 மாவட்­டங்­களில் நோய்ப்­ப­ர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் நீடிக்­கும்," என்று லவ் அகர்­வால் மேலும் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை பெரிய அள­வில் அதி­க­ரிக்க வாய்ப்­பில்லை என்று விஞ்­ஞா­னி­யும், நிதி ஆயோக் உறுப்­பி­ன­ரு­மான வி.கே. சரஸ்­வத் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா கிரு­மிக்கு எதி­ரான போராட்­டத்­தில் பிற நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்­தியா நல்ல நிலை­யில் இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"கடந்த 20 ஆண்­டு­க­ளா­கவே சிக்­குன் குனியா, டெங்கி போன்ற பல்­வேறு கிரு­மித் தாக்­கு­தல்­களை இந்­தியா தொடர்ந்து எதிர்­கொண்டு வந்­துள்­ளது.

"இந்­நி­லை­யில் ஊர­டங்கு உத்தரவு நடவடிக்கையானது நல்ல பலன் தந்­துள்­ளது," என்­றார் சரஸ்வத்.